- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, punjabi
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில்கோபி மட்டர் கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
நம்மில் பலருக்கு எளிமையான முறையில் சப்பாத்தி செய்யத் தெரிந்த அளவுக்கு, அதற்கேற்ப கிரேவி செய்யத்தெரியாது. ஆனால் சுவையான கிரேவி செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். பொதுவாக பஞ்சாபி சமையல் என்றாலே அது தனி சுவைத்தான். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் காலிஃப்ளவர் வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்கள்.
வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. காலிஃப்ளவர் கொண்டு பஞ்சாபி தாபா ஸ்டைலில் எப்படி ஒரு கிரேவி செய்யலாம் என்று பார்ப்போம். இந்த கோபி மட்டர் செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த கோபி மட்டர் பஞ்சாபி சுவையில் இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்போது சுவையான கோபி மட்டர் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பஞ்சாபி வெண்டைக்காய் மசாலா இப்படி செய்து பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவான ரெசிபி!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, கடலை மாவு, சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் மற்றொரு பவுளில் தயிர், தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் கலந்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு பட்டர் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, இடித்த பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விடவும். பின் நாம் கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
பின் வேகவைத்த பச்சை பட்டாணி மற்றும் காலிஃபிளவரை சேர்த்து மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி, கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தாபா கோபி மட்டர் தயார்.






