- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பன்னீர் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு இன்று மாலை பன்னீர் லாலிபாப் செய்து கொடுங்கள். இவை அனைவருக்கும் பிடித்தவை, குறிப்பாக இந்திய-சீன உணவுகளை விரும்பும் அனைத்து உணவுப்பிரியர்களுக்கும். சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் அவற்றை உணவகங்களில் உள்ள சுவை போலவே வீட்டில் எளிதாக செய்யலாம்.
Ingredients
Method
முதலில் பன்னீரை 12 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பன்னீர் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, இதில் பன்னீர் துண்டுகளை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
சில குச்சிகளை எடுத்து அவற்றை ஒவ்வொரு பன்னிரண்டிலும் சொருகி விடவும்.
வேகவைத்த நூடுல்ஸ், சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி உதிரியாக எடுத்துக் கொள்ளவும். நூடுல்ஸ்ஸை கையில் எடுத்து பன்னீர் துண்டுகளின் மேல் சுற்றிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில் இருக்கும் பொழுது நூடுல் சுற்றியுள்ள பன்னீர் லாலிபாப்களை எண்ணெயில் சேர்த்து இரண்டு நிமிடம் பொரித்து எடுக்கவும்.
ஒரு பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிது வெள்ளை எள் சேர்க்கவும். அத்துடன் செஸ்வான் சாஸ் சேர்த்து கிளறவும்.
பின்பு அதில் சிறிது சோள மாவு மற்றும் தண்ணீரை கரைத்து இதில் சேர்க்கவும் கூடவே உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
கலவை கெட்டியானதும் பொரித்து வைத்துள்ள லாலிபாப் களை இதில் போட்டு இரண்டு பக்கமும் மெதுவாக திருப்பி போட்டு மசாலா முழுவதும் பன்னீரில் ஒட்டிய உடன் அடுப்பை அணைத்து சூடாகப் பரிமாறவும்.






