- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
முருங்கைக்காய் என்றாலே சாதாரணமாக சாம்பார், குழம்பு இவைகள்தான் வைத்து சாப்பிடுவோம். கொஞ்சம் வித்தியாசமான முறையில் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டும் முருங்கைக்காய் பால் கறி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கைக்காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது. முருங்கை மரத்தில் உள்ள அத்தனையும் மருத்துவ குணம் மிக்கது தான். முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.
முருங்கைகாய் உணவு வகைகளை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். முருங்கைக்காய் சேர்த்து சாம்பார், பொரியல், கார குழம்பு இப்படி வைப்போம். இது இரண்டையும் தவிர்த்து, முருங்கைக்காயை வைத்து ஒரு பால் கறி எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது முற்றிலும் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி. புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளில் முருங்கைக்காய் ஒன்று. இது பலருடைய ஃபேவரெட் எனலாம். குழம்புடன் முருங்கைக்காய் சேர்த்து சமைக்கும்போது முருங்கைக்காய் வாசனை சாப்பிடும் முன்னரே நாவில் எச்சில் ஊற வைக்கும். இந்த பால் கறியை சாதத்திற்கு மட்டுமன்றி இட்லி, தோசைக்குக்கும் சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க முருங்கைக்காய் கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
Ingredients
Method
முதலில் முருங்கைக்காய், வெங்காயம், இரண்டையும் கழுவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் நறுக்கின முருங்கைக்காய், மிளகாய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
முருங்கைக்காய் பாதி வெந்ததும் தேங்காய் பால் மற்றும் காய்ச்சிய பால் ஊற்றி கொதிக்க விடவும். இவை ஒன்று சேர கொதித்து கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விடவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கடுகை சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு, சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதனை முருங்கைக்காயுடன் சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
அவ்வளவுதான் சுவையான, சுலபமான முருங்கைக்காய் பால் கறி தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.






