- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner
உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷையும் அதிகம் செய்வீர்களா? எப்போது ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்து விட்டதா? அப்படியானால் அடுத்த முறை சப்பாத்திக்கு முட்டை சைடு டிஷ் செய்வதாக இருந்தால், வித்தியாசமான இந்த முட்டை கீமா கறி செய்து பாருங்கள். முட்டை உடலுக்குத் தேவையான ஓர் சீரான உணவு என்று அழைக்கப்படுகிறது. முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு பொருள், உடலுக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை வழங்க முட்டை உதவுகிறது.
அதனால் தான் அவற்றை தினமும் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாக, ஒரு கோழி முட்டை 65 கிராம் எடை இருக்கும். இதில் பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. சில சமயம் குழந்தைகள் முட்டையை அப்படியே வேகவைத்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு சற்று வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுத்தால் தான் சாப்பிடுவார்கள். அந்த சமயத்தில் நாம் சற்று வித்தியாசமாக இந்த முட்டை கீமா கறி செய்து கொடுக்கலாம்.
இந்த முட்டை கீமா கறி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தயிர் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, ரசம் சாதம், பருப்பு சாதம் ஆகியவற்றிற்கும் தொட்டு சாப்பிடலாம் அவ்வளவு சூப்பரா இருக்கும். இது தவிர, இந்த கறி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி முட்டை கீமா கறி செய்தால், பின் எப்போதும் இந்த ஸ்டைலில் தான் செய்ய சொல்லி வீட்டில் உள்ளோர் கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும். இப்போது சுவையான முட்டை கீமா கறி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அரைத்து விட்ட முட்டை பொடிமாஸ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் வேகவைத்த முட்டையை ஒரு பவுளில் துருவி சேர்த்து அதனுடன் கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
பின் ஒரு பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நாம் செய்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து இரண்டு பக்கமும் சிறிதளவு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
பின் மசாலா வாசனை போனதும் நாம் செய்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
பின் மசாலா நன்கு சுண்டி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டை கீமா கறி தயார்.






