- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 6
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
தீபாவளி பண்டிகை வரப்போகிறது. தீபாவளி என்றால் வீட்டில் புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் என முழு கொண்டாட்டம் நடக்கும். அந்த கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பிடிப்பது இனிப்பு மற்றும் கார வகைகள் தான். அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்ய திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். பொதுவாக தீபாவளியன்று அனைவரது வீட்டிலும் லட்டு, அப்பம், அதிரசம், ஜிலேபி, மைசூர் பாக், முறுக்கு, மிச்சர் ஆகியவை தான் மிகவும் முக்கியமாக செய்வார்கள். தீபாவளிக்கு உங்கள் வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்யும் வழக்கம் உள்ளதா?
அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் கார பலகாரங்களை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் முறுக்கு, சீவல், ரிப்பன் பக்கோடா என்று பலவற்றை செய்து போட் அடித்து விட்டதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். எப்போதும் செய்வதை போல் இல்லாமல் வித்தியாசமான இஞ்சி பக்கோடாவை தீபாவளி ஸ்பெஷலாக செய்து பாருங்கள். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இஞ்சி பக்கோடாவை அட்டகாசமாய் சுவையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட ருசியான இஞ்சி துவையல் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் வெண்ணெயை சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும். அதன்பிறகு மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் மைதா மாவுடன் அரைத்ததை சேர்த்து அதனுடன் உப்பு, முந்திரி பருப்பு, சோடா உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான இஞ்சி பக்கோடா தயார்.






