பணம் உங்களை தேடி வந்து சேர செய்ய வேண்டிய 5 விஷயங்கள்! இதை செய்யுங்கள் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

தினமும் பணத்தை தேடி தான் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அது நம்மளை தேடி வர எந்த வலியும் இல்லையா என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. அதற்குத்தான் ஆன்மீகத்தில் சில பரிகாரங்களை கூறியுள்ளார்கள், அதனை சரிவர நமது வீட்டில் செய்து வந்தால் பணம் நம்மை தேடி வரும். அது என்ன பரிகாரம் என்பதை பற்றியும், எப்படி அதனை வீட்டில் செய்ய வேண்டும், என்பதனை பற்றியும் இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கொத்தமல்லி இலை

நம் வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு சின்ன கண்ணாடி அல்லது மண்பாண்டம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து சிறிதளவு கொத்தமல்லி தழைகளை மேலே போட்டு வைக்க வேண்டும். இது பணத்தை ஈர்த்துக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. தினந்தோறும் தண்ணீரையும் கொத்தமல்லியையும் மாற்றி விட வேண்டும்.

- Advertisement -

அரிசி

அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசியை எடுத்து நிரப்பிக் கொள்ளுங்கள். இதற்கு என்ன அரிசி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் குடும்பத்தில் யார் சம்பாதிக்கிறாரோ அவரை அரிசியில் ஒரு நாணயத்தை முதலில் புதைக்க சொல்லுங்கள், பின்னால் அடுத்தடுத்து குடும்பத்தில் உள்ளவர்கள் அரிசியில் நாணயத்தை புதைத்து விடுங்கள். இதனை உங்கள் வீட்டில் சமையல் அறையில் வைத்து விடுங்கள். இந்த அரிசியை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றி விடுங்கள். இப்படி செய்கையில் மகாலட்சுமி தாயார் மற்றும் அன்னபூரணி தாயாரின் அனுகிரகம் கிடைக்கும்.

சோளக்கருது

அடுத்ததாக சோளக்கருது இதனை ஒரு துணியில் கட்டி மூட்டை போல் வீட்டின் தென்கிழக்கு மூலையில் தொங்கவிட்டு விடுங்கள். இதனை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றும் பொழுது இந்தச் சோளக்கருதை பறவைகளுக்கு தானமாக போட்டு விடுங்கள். பொதுவாக நம் வீட்டின் முன்புறத்தில் கற்றாலை ஒன்றை தொங்க விடுவதுண்டு, அப்படி நாம் செய்கையில் வீண் செலவுகள் குறைந்து பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குங்குமம்

இவை அனைத்தும் விட முக்கியமான இந்த பரிகாரத்தை செய்து விடலாம். இதற்கு நீங்கள் தினமும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் போது குங்குமத்தை கொஞ்சம் பேஸ்ட் போல குழைத்து அதில் ஒரு குச்சியை வைத்து இடது கையால் ரூ என்ற வார்த்தையை போட வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் ருபீஸ் என எழுத வேண்டும். இதை பௌர்ணமி நாளில் தொடங்கி அமாவாசை வரை செய்ய வேண்டும். அதாவது 15 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். இதை தினமும் செய்யும் பொழுது பணத்தை ஈர்க்க நீங்கள் தயாராகி விடுவீர்கள். இதன் மூலம் பணம் உங்களைத் தேடி வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த தாந்திரீக முறைகளை பின்பற்றினால் மட்டும் பணம் நமக்கு வந்து விடுமா? என்ற கேள்வி பலருக்கும் எழும்பலாம். இந்த தாந்த்ரீக முறைகளை பின்பற்றுவதன் மூலம் பணத்தை சேமிக்க, சம்பாதிக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். அது மட்டும் இன்றி புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும் வராத பணம் நமக்கு வரும்.

இந்த பரிகார முறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதையெல்லாம் கடைப்பிடித்து பணவரவை அதிகரித்து கொள்ளலாம்.

-விளம்பரம்-