- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான ரெசிபி ரொம்ப ரொம்ப ஃபேமஸா இருக்கும். அந்த வகையில நாகர்கோவில் கன்னியாகுமரி இந்த சைட்ல மீன் ரொம்ப ஃபேமஸ். அப்படி இருக்கும் போது நெத்திலி மீன் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான பாரம்பரியமான கொழைய சோறு இப்படித்தான் செய்யணும். கன்னியாகுமரி பக்கம் இருக்கிறவங்களுக்கு இந்த ரெசிபி நல்லாவே தெரியும். ஆனால் தெரியாதவங்களுக்கு இந்த சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதுல முருங்கைக்கீரை நெத்திலி மீன் மரவள்ளிக்கிழங்கு எல்லாமே சேர்த்து செய்றதால் ஒரு புது விதமான டேஸ்ட்டுல ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக ஒரே ஒரு தடவை சாப்பிட்டு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. நல்ல சாதம் குழைந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுல நெத்திலி மீன் சேர்த்து செஞ்சா மட்டும் தான் சுவையாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமை ஆயிடுவாங்க.
சத்தான சில பொருட்கள் இந்த சாதத்துல இருக்கிறதால இதை சாப்பிடுவது ரொம்பவே ஆரோக்கியமானது. நெத்திலி மீன் வச்சு குழம்பு 65 கூட்டு அப்படினு நிறைய ரெசிபி செஞ்சி இருந்தாலும் நெத்திலி மீன் வச்சு செய்யக்கூடிய இந்த ரெசிபி ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த ருசியான டேஸ்டான கொழை சோறு ரெசிப்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : காரசாரமான கன்னியாகுமரி நண்டு மசாலா குழம்பு செய்வது எப்படி ?
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசியை கழுவி சேர்க்கவும்.
அரைவேக்காடு வெந்ததும் இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை சேர்த்து கிளறி விடவும்.
தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் புளித்தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
நெத்திலி மீனை கழுவி சுத்தம் செய்து அதனையும் சேர்த்து கிளறவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் மரவள்ளிக்கிழங்கு சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து அந்த விழுதையும் சாதத்தில் சேர்த்து கிளறவும்.
அனைத்தும் சேர்த்து நன்றாக வெந்து வந்ததும் கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கொழைய சோறு தயார்.






