வாழ்வில் ஒரு முன்னேற்றேம் வேண்டுமா ? ஏலக்காயுடன் இந்த ஒரு பொருள் வாங்கினால் போதும்!

- Advertisement -

இன்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு அயராது உழைத்துக் கொண்டிருப்பவரில் முக்கால்வாசி பேர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி விட மாட்டோமா என்ற கனவோடு வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் எடுத்த உடனே அடியாக நாம் உயர்ந்த நிலையை அடைந்து விட முடியாது படிப்படியாகத்தான் செல்ல வேண்டும். ஏன் இப்போது வாழ்க்கையில் முன்னேறி ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் கூட ஒரு காலத்தில் தங்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி தான் அந்த இடத்தில் உட்கார்ந்து இருப்பார்கள். அதனால் நீங்களும் நம் வாழ்வில் படிப்படியாக முன்னேறி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் உங்கள் வாழ்வை வாழ வேண்டும்.

-விளம்பரம்-

முன்னேற்றம் இல்லாதவர்

இருந்தாலும் சிலருக்கு அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் என்பது துளி அளவு கூட இருக்காது. ஒரு முறை அவர்கள் வாழ்வில் ஒரு முன்னேற்றம் தெரிந்து விட்டால் போதும் அதன் பிறகு படிப்படியாக அவர்களே முன்னேறி வந்து விடுவார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு முன்னேற்றமே இல்லை என்று நினைப்பவர்கள் மகாலட்சுமியின் அருளை பெற்று விட்டாலே போதும் ஈசியாக அடுத்தடுத்த வாழ்க்கையை நோக்கி நீங்கள் செல்லலாம் அதனால். அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதனை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காண உள்ளோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

- Advertisement -

பரிகாரம்

நாம் இப்படி செய்யும் பரிகாரம் வெறும் பணம் உங்களுக்கு சேர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல வாழ்வில் பல குறிக்கோள்கள் ஒரு மனிதனுக்கு இருக்கும். அந்த குறிக்கோள் கூட நிறைவு பெறுவதற்காக கூட வேண்டி நாம் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு வெள்ளிக்கிழமை உகந்த நாளாக இருக்கும் அதனால் வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் போல் வீட்டில் மகாலட்சுமிக்கு பூஜை செய்து தாயாரின் பாதத்திற்கு கீழே ஏலக்காயை வைத்து வழிபட்டு வந்தால் அது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். வாழ்க்கையில் ஒரு முன்னேற்றேம் கிடைக்கும்.

பரிகாரம் செய்முறை

அதனால் வெள்ளிக்கிழமை அன்றைய தினம் கடைக்கு சென்று ஐந்து ரூபாய்க்கு ஏலக்காய் வாங்கிக் கொள்ளுங்கள். ஏலக்காய் வாங்கும் போது அதனுடன் கண்டிப்பாக கசகசா ஒரு 50 கிராம் அல்லது 100 கிராம் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் வாங்கிய பிறகு வீட்டிற்கு வந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் முதலில் கசகசாவை கொட்டி விட்டு அதன் மேல் நாம் வாங்கி வந்த ஏலக்காய் வைத்து மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடுங்கள். அதன் பின்பு வெள்ளிக்கிழமை எப்படி பூஜை அறையை தயார் படுத்தி பூஜை செய்வீர்களா அதே போல் தயார்படுத்தி மகாலட்சுமிக்கு தாயாருக்கு நிவேதனமாக பால் பாயாசம் செய்து வையுங்கள்.

பிராத்தனை

அதன் பின்பு மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து மனம் உருகி உங்களது குறிக்கோள் என்னவோ அதை சொல்லி உங்களுக்கு என்ன வர வேண்டும் என்பதனை மகாலட்சுமி தாயாரின் முன்பு அமர்ந்து கேளுங்கள். உங்கள் பிரார்த்தனை முடிந்தவுடன் தாயாருக்கு கற்பூர ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து நிவேதனமாக வைத்த பால் பாயாசத்தை வீட்டில் உள்ள எல்லாருக்கும் பிரசாதமாக கொடுங்கள். அதன் பிறகு தாயாரின் காலுக்கு கீழ் வைத்த கசகசா, ஏலக்காயை பத்திரப்படுத்தி நீங்கள் வீட்டின் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

-விளம்பரம்-

பௌர்ணமி செய்யலாம்

இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடைகளில் ஏலக்காய் வாங்கும் போது கசகசாவையும் சேர்த்து வாங்கி தாயாரின் பாதங்களுக்கு கீழ் இந்த இரண்டு பொருட்களையும் வைத்து நம் பிரார்த்தனை செய்யும் விஷயம் நமக்கு சீக்கிரமாகவே நடக்கும். இந்த பரிகாரத்தை நீங்கள் வாரம் ஒரு முறையும் செய்து வரலாம் அல்லது மாதத்தில் ஒரு வெள்ளி கிழமை இப்படி செய்யலாம். இதை எதுவுமே செய்ய நேரமில்லை என்பவர்கள் பௌர்ணமி தினத்தில் இந்த பரிகாரத்தை செய்து மகாலட்சுமி தாயார் பரிபூரண அருளை பெற்றுக்கொள்ளலாம். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here