- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, karnataka
- Course
- Breakfast, evening
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் மங்களூர் பன் செய்து கொடுங்கள்.
மாலையில் நல்ல சுவையான அதே சமயம் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், கர்நாடகத்தில் உள்ள மங்களூரில் மிகவும் பிரபலமான மங்களூர் பன் என்று அழைக்கப்படும் வாழைப்பழ பூரியை செய்து சாப்பிடுங்கள். மங்களூரு பகுதிகளில், மங்களூரு பன் மிகவும் பிரபலமான சிற்றுண்டி. காலை சிற்றுண்டிக்கும் இதையே சாப்பிடுவர். மாலை டீயுடன் இதை சாப்பிடுவர். மங்களூரு பன் மற்ற நகரங்களிலும் கிடைக்கிறது. இது வழக்கமாக கிடைக்கும் பன் போல் இல்லாமல் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இதை வாழைப்பழ பூரி என அழைக்கின்றனர். வெளியே கொஞ்சம் மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல சுவையாகவும் தெரியும். இதை தேங்காய் சட்னி, வெஜிடபிள் குருமா உடன் தொட்டு சாப்பிடுவார்கள். இதை சாப்பிட ஹோட்டலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி அதனால் வீட்டிலேயே இந்த ரெசிபியை செய்யலாம். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அட்டகாசமான சுவையில் மங்களூர் பன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மங்களூர் ஸ்டைலில் மஞ்சள் பூசணிக்காய் வைத்து சுவையான சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் வாழைப்பழத்தை நன்கு மசித்து சேர்த்து அதனுடன் தயிர், சர்க்கரை, உப்பு, சீரகம், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் மைதா மாவு மற்றும் நெய் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் இதனை சின்ன உருண்டைகளாக உருட்டி பூரியாக தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மங்களூர் பன் தயார்.






