- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
காலை எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்து விட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அந்த அவலை என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு உப்புமா செய்யுங்கள். இந்த அவல் உப்புமா வழக்கமாக செய்யும் உப்புமாவைப் போல் இல்லாமல், சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அவல் எளிதில் செரிமானமாகும் மற்றும் பலவகையான உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
நமது வீடுகளில் அவல் வைத்து சுவையான சிற்றுண்டி உணவுகளை செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் வட இந்தியாவில் போகா எனும் உணவினை அவல் கொண்டே செய்கின்றனர். இது சாப்பிடுவதற்கு உப்புமா போலவே இருக்கும். இன்று நாம் செய்யும் உப்புமா ரெசிபியை அவல் வைத்து செய்வது எப்படி என இங்கு பார்ப்போம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த உப்புமாவை வீட்டில் காலை வேளையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி செய்றதுக்கு குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். காலைல ப்ரேக் பாஸ்ட்க்கு குழந்தைகளுக்கு டக்குனு செஞ்சு கொடுத்து விடலாம்.
இதுல காய்கறிகள் இருக்கிறதால சத்தான ஒரு பிரேக்பாஸ்ட் அப்படின்னு கூட சொல்லலாம். குழந்தைகள் ஈவினிங் வீட்டுக்கு வரும் போது ஏதாவது சாப்பிடணும் போல இருக்குது பசிக்குதுன்னு கேட்டாங்கன்னா இதை செஞ்சு கொடுத்தீங்கன்னா உங்களுக்கு வயிறு நிறைந்திடும். இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். முக்கியமா குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். காலை உணவு ஆரோக்கியமாக இருந்தால் தான் அன்றை நாள் சுருசுருப்பாக அமையும். அதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும் உதவுகிறது. எனவே காலை உணவை ஹெல்தியாக்க பட்டாணி அவல் உப்புமா டிரை பண்ணி பாருங்க.
இதனையும் படியுங்கள் : மசாலா உப்புமா செய்வது எப்படி
Ingredients
Method
முதலில் அவலை நன்கு இரண்டு மூன்று முறை நன்கு தண்ணீரில் அலசி விட்டு சற்று காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் பச்சை பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும், அதனுடன் சர்க்கரை, கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
பின் பட்டாணி வெந்ததும் அவலை சேர்த்து நன்கு கலந்து விடவும், பின் கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பட்டாணி அவல் உப்புமா தயார்.






