- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அதில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது கீரை தான். கீரையில் அதிகப்படியாக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கீரையில் இரும்பு சத்துக்கள் உள்ளது. அதனால் தான் குழந்தைகளுக்கு தினம் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது அவசியம். கீரையில் நிறைய வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆகவே இந்த பதிவில் வெந்தயக்கீரை வைத்து மேத்தி தால் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு சிறப்பான உணவு பொருளாகவும். வெந்தயக் கீரையை சாப்பிட்டாலே பாதி நோய்கள் பறந்து போய்விடுமாம். அந்த அளவுக்கு ஆரோக்கியமானது, சத்தானது, மலிவானது. வயிற்று பிரச்சனைகள், இடுப்பு வலியால் அவதிபடுபவர்கள் வெந்தயக் கீரையை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிடலாம். கீரைக்கூட்டு, கீரை பொரியல், கீரை குழம்பு என்று ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் சமைத்துக் கொள்ளலாம்.
எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். அதனால் ஒருமுறை வெந்தய கீரையில் இப்படி மேத்தி தால் வைத்து சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இந்த உணவு உங்கள் நாக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும் இதமளிக்கும் அளவிற்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.
உங்களுக்கு வகை வகையாக உணவு செய்ய நேரம் இல்லாத சமயத்தில் சட்டுன்னு இந்த ரெசிபியை செய்து பாருங்கள். இதனுடன் சேர்த்து சாப்பிட ஊறுகாய் அல்லது அப்பளம் மட்டும் இருந்தால் போதும். இந்த ரெசிபி பெரியவர்களுக்கு மட்டும் பிடித்ததாக இருக்காது குழந்தைகளுக்கும் நிச்சயமாக பிடிக்கும் அதனால் ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள். இப்போது சுவையான இந்த மேத்தி தால் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : முருங்கைக்கீரை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!
Ingredients
Method
முதலில் துவரம் பருப்பை நன்கு அலசி குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு வெந்தயக்கீரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கி வேகவைத்த பருப்பை சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி மற்றும் நெய் சிறிதளவு சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மேத்தி தால் தயார்.






