- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம்,வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே.
காலையில் எப்பொழுதும் பொங்கல், இட்லி, தோசை என்று அரைச்ச மாவையே திரும்பி திரும்பி அரைக்கிறீர்களா?? கவலை வேண்டாம், சுவையும், சத்தும் கலந்த ஒரே உணவு முடக்கத்தான் ஊத்தாப்பம். ஊத்தாப்பம் அப்படினாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். கடைகளில் ஊத்தாப்பங்கள் வாங்கி சாப்பிடாத ஆட்களே இருக்க மாட்டாங்க. அந்த காலத்தில் பாட்டி செய்யும் ஊத்தாப்பத்தின் சுவையை தனி. அதை அடிச்சிக்க ஆளே கிடையாது. அந்த ஊத்தாப்பத்தை வெச்சி தான் இன்றைய காலத்தில் பீட்சா என்ற ஒரு உணவை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
நமது தென்னிந்திய உணவு வகையில் கொழுப்பு குறைந்த, புரதம் நிறைந்த உணவுகள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் ஊத்தாப்பம். புரதம் உள்ள உணவுகளை நீங்கள் உண்ணும்போது உங்களுக்கு நிறைவாக உண்ட உணர்வைத் தரும். எடை அதிகரிப்பும் ஏற்படுத்தாது. இந்த முடக்கத்தான் ஊத்தாப்பத்துக்கு கொத்தமல்லி சட்னி வச்சு சாப்பிடும்போது அவ்வளவு ஒரு சுவையா இருக்கும். இந்த ஊத்தாப்பத்தை வீட்ல செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாவும் இருக்கும் அதே நேரம் பிடிச்ச மாதிரியான ஒரு உணவாகவும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான ஒட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் தோசை மாவில் ரவை, தயிர் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நன்கு கழுவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்சி ஜாரில் முடக்கத்தான் இலை, சீரகம், பூண்டு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள இந்த கலவையை தோசை மாவுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலக்கவும்.
அதன்பிறகு தோசை மாவில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் அப்படியே வைத்து விடவும்.
பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை நன்கு கலக்கி ஊத்தாப்பம் போல் உதவும்.
அதில் நறுக்கிய வெங்காயம், கேரட், கொத்தமல்லி தூவி ஊத்தாப்பம் சுட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முடக்கத்தான் ஊத்தப்பம் தயார்.






