என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் எதாவது ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது
இதையும் படியுங்கள் : சுவையான அவரைக்காய் கூட்டு செய்வது எப்படி ?
என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த முட்டைகோஸ் பருப்பு கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இந்த முட்டைகோஸ் பருப்பு கூட்டு இருக்கும். ஆகையால் இன்று இந்த முட்டைகோஸ் பருப்பு கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
முட்டைகோஸ் பருப்பு கூட்டு | Muttaikose Paruppu Kottu Tamil Recipe
Equipment
- 2 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- ½ கப் முட்டைகோஸ் நறுக்கியதூ
- ¼ கப் பாசி பருப்பு
- 1 மேசை கரண்டி எண்ணெய்
- 2 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 3 பச்சை மிளகாய் கீறியது
- 2 தக்காளி நறுக்கியது
- ¼ tbsp மஞ்சள் தூள்
- ½ tbsp மிளகாய் தூள்
- 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
மிக்ஸியில் அரைக்க
- ¼ கப் துருவிய தேங்காய்
- 1 tbsp சீரகம்
- ¼ tbsp சோம்பு
- தண்ணீர் சிறிது
செய்முறை
- முதலில் மசாலா அரைக்க ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொண்டு அதில் துருவிய தேங்காய், சோம்பு, சீரகம் சேர்த்து மற்றும் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் பாசி பருப்பை பாத்திரத்தில் சேர்த்து இரண்டு மூன்றும் முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள், பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பருப்பை சேர்த்து பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
- பின் பருப்பு பாதியளவு வெந்ததும், அதில் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து பின் பருப்பு வெந்து நன்கு மென்மையாக மாறும் வரை நன்கு வேக வைத்து கொள்ளவும்.
- பின் இன்னொரு கடாயை மற்றொரு அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பின் எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்பு அதில் மிளகாய் தூள், மிக்ஸியில் அரைத்து தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், மற்றொரு அடுப்பில் உள்ள பருப்பு கலவையை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் முட்டை கோஸ் பருப்பு கூட்டு தயார்.