- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- LUNCH
தினமும் மதியம் ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் செய்யக்கூடிய ரெசிபி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் மட்டன் தொன்னை பிரியாணி செய்து சாப்பிடுங்கள். நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். நாடு ராத்தியில் கொடுத்தால் கூட பிரியாணியை ரசித்து, ருசித்து சாப்பிடுவோம். பிரியாணி என்றாலே போதும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பிரியாணியில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று பல வகைகள் உள்ளன.
அந்த வகையில் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் மட்டன் தொன்னை பிரியாணி பற்றி தான் பார்க்க போகிறோம். ஆனால், எப்போதும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமான சுவை கொண்ட இந்த பிரியாணி செய்வதால் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும், அதேசமயம் செய்வதும் சுலபம். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். இந்த ரெசிபியை நீங்கள் குழந்தைகளின் மதிய உணவிற்கு கூட செய்து கொடுக்கலாம்.
பொதுவாக வீட்டில் செய்யும் உணவுகளை குழந்தைகள் சுவையாக இருந்தால் மட்டுமே சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கு உணவு செய்தால் அதில் ஆரோக்கியம் நிறைந்திருக்க வேண்டும் என்பார்கள். இதற்கு ஏற்ற ஒரு உணவு தான் இந்த மட்டன் தொன்னை பிரியாணி. இதில் உடலுக்கு தேவையான நன்மைகள் நிறைந்திருப்பதுடன் சுவையும் பிரமாதமாக இருக்கும். இப்போது இந்த பதிவில் மட்டன் தொன்னை பிரியாணி செய்வது எப்படிசெய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : பெங்களூர் அவல் இட்லி இப்படி ஒருமுறை செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் மட்டனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதனுடன் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி, மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மராத்தி மொக்கு, அன்னாசி பூ, பிரியாணி இலை, ஜாவித்ரி, கல் பாசி, சோம்பு, மிளகு சேர்த்து வறுக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லி தூள், காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி நான்கு விசில் விடவும்.
அதன்பிறகு ஊற வைத்துள்ள அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மட்டன் தொன்னை பிரியாணி தயார்.






