- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள். கடல் மீன் உணவுகளில் சுவையான வகைகளில் நண்டு மிகவும் முக்கியமானது. நண்டுகள், சிப்பி இனத்தைச் சேர்ந்தவை. நண்டுகளில் பல வகை உண்டு. பால் நண்டு, வலை நண்டு, வயல் நண்டு, டஞ்சன் நண்டு, நீல நிற நண்டு, சிவப்பு நிற நண்டு என உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது.
சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் ரசம் இன்றியமையாது. காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படும் போது ரசம் குடித்தால் சற்று நிவாரணம் கிடைக்கும். ரசமானது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு மிகவும் உதவுகிறது. மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், புதினா ரசம், என்று பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஒவ்வொரு ரசமும் ஒவ்வொரு விதத்தில் ஒரு சுவையும்,மணமும் தரும். அந்த வகையில் சளிக்கி மிகுந்த நன்மை அளிக்க கூடியது நண்டு ரசம். சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் நல்ல நிவாரணம் தரும். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான நண்டு ரசம் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பெய்கின்ற மழைக்கு இதமா சுட சுட நண்டு மிளகு சூப் இப்படி செஞ்சி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் கிராமங்களில் வயல்களில் மழைக்காலங்களில் கிடைக்கும் நண்டுகளை உயிருடன் இருக்கும் போதே சுத்தம் செய்து இடித்து வைத்துக் கொள்ளவும்.
புளியை சிறிது நேரம் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். தக்காளியை நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம், பூண்டு, சுக்கு, மிளகு, பச்சை மிளகாய், திப்பிலி, அதிமதுரம், ஓமம், சீரகம், காய்ந்த மிளகாய் போன்றவற்றை இடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின் இடித்து வைத்துள்ள வெங்காயம் போன்றவற்றை சேர்த்து வதக்கி, பிழிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து கொள்ளவும்.
அதன்பிறகு இடித்து வைத்துள்ள நண்டை சேர்த்து, நண்டு வதங்கியதும் புளிக்கரைசல் ஊற்றி அதற்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ரசம் முறை சேர்ந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான வயல் நண்டு ரசம் தயார்.






