பொதுவாக நம் வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் எதை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும்.ஆகையால் இன்று ஒரு உணவை ஒரு புது விதமாக செய்து பார்க்க போகிறோம். இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஆம் இன்று பூரியை புதுவிதமான முறையில் மசாலா பொருட்களை சேர்த்து அதன் பின்பு பூரி செய்யப் போகிறோம்.
இதையும் படியுங்கள் : சுட சுட காரசாரமான மசாலா இட்லி செய்வது எப்ப்டி ?
நீங்கள் இதை போல் பூரி செய்தால் அப்படியே குருமா இல்லாமல் பூரியை சாப்பிடலாம் அந்த அளவிற்கு அதன் ருசி இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு பூரி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு பூரி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் கூட இது பிடித்தமான உணவாக இருக்கும் ஆகையால் அதனால் இன்று புதுவிதமாய் இந்த பூரி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
புது விதமான பூரி | New Style Poori Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
- 1 பூரி கட்டை
தேவையான பொருட்கள்
- 250 கிராம் கோதுமை மாவு
- 1 உருளை கிழங்கு வேக வைத்தது
- 2 tbsp ரவா
- நறுக்கிய கொத்தமல்லி சிறிது
- 1 tbsp மிளகாய் தூள்
- ½ tbsp கறி மசாலா
- ¼ tbsp மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- 2 சிட்டிகை ஒமம்
- 1 tbsp எண்ணெய் மாவு பிசைய
- பொரிக்க எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் 250 கிராம் கோதுமை மாவை ஒரு பவுளில் நன்கு சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு சலித்த கோதுமை மாவுடன் ஒரு உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து கட்டிகள் இல்லாமல் மசித்து விடவும்.
- பின் மசித்து விட்ட உருளை கிழங்கை மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், அதன் பின்பு இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு ரவா, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,
- அரை டீஸ்பூன் கறி மசாலா பொடி, ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு இரண்டு சிட்டிகை ஓமம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
- அதன் பின்பு மாவு பிசைவதற்கு தேவையான அளவு தண்ணியை சிறிது சிறிதாக சேர்த்து டைட்டான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள். அதன் பின்பு இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி மாவை நன்கு பிசைந்து ஒரு பத்து நிமிடங்கள் ஈர துணியால் மூடி விடுங்கள்.
- அதன் பின்பு மாவை உருண்டை பிடித்து பூரிகட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். பூரிக்கு தேய்க்கும் போது சிறிது தடிமனாகவே தேய்த்து கொள்ளுங்கள் அப்பொழுதுதான் பூரி உப்பி வரும்.
- அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து பூரி பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும், நாம் தேய்த்து வைத்திருக்கும் பூரி கடாயில் சேர்த்து அதன் மேல் கரண்டியால் எண்ணெய் ஊற்றினால் உப்பி வரும்.
- இப்படியாக மீதம் இருக்கும் பூரி உருண்டைகளையும் தயார் செய்து பொரித்து எடுத்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் புதுவிதமான முறையில் சுவையான பூரி தயார்.