- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Breakfast, dinner
இட்லி தோசைக்கு நாம் பெரும்பாலும் சட்னி சாம்பார், துவையல் இவைகளைத்தான் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடுவோம். இன்று கொஞ்சம் வித்தியாசமாக இட்லி தோசைக்கு ஏற்ற ஒரு சூப்பரான வெங்காய கொஸ்து எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். இந்த வெங்காய கோஸ்ட் பொதுவாக சிதம்பரத்தில் தான் மிகவும் ஃபேமஸான ஒரு உணவு.
இந்த சிதம்பர பேமஸான உணவை உங்கள் வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள் அனைவருக்கும் இந்த வெங்காய கொஸ்து மிகவும் பிடிக்கும். வெங்காயம் கொஞ்சம் அதிகமாக போட்டு வறுத்து அரைத்த மசாலாவில் செய்யப் போகும் இந்த வெங்காய கொஸ்து மிகவும் வாசனையாக,ருசியாக, அட்டகாசமாக இருக்கும்.
குழந்தைகளுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான சைடிஷ் கொடுத்து அவர்களுக்கு போர் அடித்து இருக்கும். எனவே சாப்பிடவும் மிகவும் அடம் பிடிப்பார்கள் அந்த மாதிரியான குழந்தைகளுக்கு இந்த வெங்காய கொஸ்து செய்து கொடுத்தால் ஒரு இட்லி ஒரு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும் இந்த வெங்காய கொஸ்து எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
5 காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பு தனியா விதைகள், பெருங்காயம் அனைத்தையும் ஒரு கடாயில் போட்டுவறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
பிறகு அதனுடன்வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
புளியை நன்றாக கரைத்து வடிகட்டி அதில் சேர்த்துக் கொள்ளவும். புளிக்கரைசல் சேர்த்த பிறகு அனைத்தும்சேர்ந்து நன்றாக வெந்தவுடன் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பிறகுஒரு பத்து நிமிடங்கள் நன்றாக கொதித்த உடன் அடுப்பை அணைத்து விட்டால் சுவையான வெங்காய கொஸ்து தயார்.






