- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Breakfast, Side Dish
சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு சாப்பிட்டு பாருங்கள். சாதம் அமிர்தமாக உங்களுக்கு தெரியும். பில்டப் அதிகமாக உள்ளதா. யோசிக்காம ஒரே ஒருமுறை உருளைக்கிழங்கு வைத்து இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கே தெரியும் இதனுடைய ருசி. உருளைக்கிழங்கை வைத்து வறுவல் பொறியியல் என்று பலவகை செய்யலாம் அது போல் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.
காய்களிலேயே உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் .இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு நாம் எப்போதும் சட்னி சாம்பார் என்று தான் சைடிஷ் செய்வோம். இதைத் தவிர கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்வதாக இருந்தால் குருமா, வடைகறி என செய்வோம். ஆனால் இப்போது உருளைக் கிழங்கு சேர்த்து ஒரு சூப்பரான கொஸ்து எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!
Ingredients
Method
வெங்காயம்,தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு. கடலைப்பருப்பு தாளிக்கவும்.
அதன் மேல் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வதக்கவும். இவற்றுடன் பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு ஒரு முறை வதக்கவும்.
காய்கறிகள் நன்கு வதங்கிய பின், 3 டம்ளர் தண்ணீர் கலந்து குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து ஒரு கரண்டி இட்லி மாவு எடுத்து கலந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். இதன் மேல் கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கலந்து விட்டால் சுவையான கொஸ்து தயார்.






