வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் இந்த ஒரு பொருளை மட்டும் வையுங்கள்! பணம் வீடு தேடி வரும்!

- Advertisement -

நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமென்றால் வேகமாக உழைக்க வேண்டும் உழைப்பு மட்டும் போதாது இதனுடன் நீங்கள் சில பரிகாரங்களை செய்யும் போது தான் பணக்காரர் ஆக நீங்கள் எடுக்கும் முயற்சியில் தோல்விகளை இருக்காது. நீங்கள் ஒய்வு இல்லாமல் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் போது உங்கள் உடலில் சோர்வு ஏற்பட்டு சோம்பேறித்தனம் உங்களுக்குள் புகுந்தாலும், அதை விரட்டி அடித்து மேலும் அயாராமல் உழைக்க வைக்கும் சக்தி நாம் செய்யும் பரிகாரத்திற்கு மட்டுமே உண்டு. அதிலும் பச்சை கற்பூரத்தை வைத்து வேகமாக பணக்காரர் ஆக ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை முற்றிலும் நீங்கி வருமானம் உயர்வதை உங்களால் சில காலங்களிலே உணரமுடியும்.

-விளம்பரம்-

பரிகாரம் செய்ய தண்ணீர்

இந்த பரிகாரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்யவேண்டும். ஆனால் பரிகாரம் செய்ய தேவைப்படும் தண்ணீரை செவ்வாய்க்கிழமை முந்தைய தினமும், வெள்ளிக்கிழமைக்கு முந்தைய தினமும் இந்த தண்ணீரை நீங்கள் தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். பரிகாரம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு டம்ளரில் சுத்தமான குடி தண்ணீரை ஊற்றி அதில் அரை ஸ்பூன் சீரகம், ஆரை ஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை சேர்த்து டம்பளரை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

பரிகார நாளில் என்ன செய்ய வேண்டும்

இந்த தண்ணீரை மறுநாள் காலை அதாவது பரிகாரம் செய்யும் நாள் காலை எழுந்து தண்ணீரை ஒரு துணியை கொண்டு வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொண்டு, இந்த தண்ணீரை நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீரோடு கலந்து வாசல் தெளிக்க வேண்டும். நல்ல மனம் நிறைந்த இந்த தண்ணீரை கொண்டு நீங்கள் வாசல் தெளித்து கோலம் போடும் போது உங்கள் வீட்டிற்கு அப்படி ஒரு லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இந்த தண்ணீரில் இருந்து வரும் மணத்தை வீட்டில் இருப்பவர்களும் சுவாசிக்கும் போது, அந்த வாசம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். வெளியே சென்று செய்யக்கூடிய வேலையை இன்னும் நீங்கள் சுறுசுறுப்பாக செய்யத் தொடங்குவீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்யும்போது வருமானமும் உயரும்.

பச்சை கற்பூரத்தை இப்படியும் செய்யுங்கள்

அதுமட்டுமில்லாமல் இந்த தண்ணீரை கொஞ்சமாக வேறு எந்த சாதாரணமான தண்ணீரோடு கலக்காமல் அப்படியே எடுத்து வீட்டிற்குள் உள்ள மூலை முடுக்குகளில் தெளித்து விட்டாலும் அந்த வாசம் வீடு முழுக்க நிரம்பி வழியும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு மன நிம்மதியை கொடுக்கும். அன் பின்பு பச்சை கற்பூரத்தை உங்களுடைய வீட்டில் பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி, பணம் வைக்கும் பர்சில், குழந்தைகள் படிக்கின்ற புத்தகப்பையில் இப்படி எந்த இடங்களிலும் பச்சை கற்பூரத்தை வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து நன்மைகள் நிறைய நடக்கும் நீங்களும் வேகமாக பணக்காரர் ஆகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here