நாம் மதிய உணவுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுக்க, வேலைக்கு செல்லும் நபர்களுக்கு மதிய உணவாக கொடுத்து விட சூப்பரான பிரியாணி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று பன்னீர் பிரியாணி தான் செய்து பார்க்க போகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த பன்னீர் பிரியாணி செய்து கொடுத்து அனுப்பினால் டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும் ஒரு நாளும் மீதம் வராது.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் பன்னீர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?
ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களும் கூட விரும்பி சாப்பிடும் வகையில் இந்த பன்னீர் பிரியாணி அட்டகாசமான சுவையில் இருக்கும். வீட்டில் விரத நாட்கள் மற்றும் செவ்வாய் வெள்ளி போன்ற நாட்களில் கூட பிரியாணி சாப்பிட தோன்றினாள் இந்த நாட்களில் இது போன்ற சுவையான பன்னீர் பிரியாணி செய்து உங்கள் குடும்பத்துடன் சாப்பிடலாம். அதனால் இன்று இந்த பன்னீர் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பன்னீர் பிரியாணி | Paneer Biriyani Recipe in Tamil
Equipment
- 1 குக்கர்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 tbsp எண்ணெய்
- 1 tbsp நெய்
- 1 பிரியாணி இலை
- 1 பட்டை
- 3 கிராம்பு
- 3 ஏலக்காய்
- 1 பெரிய வெங்காயம் நீள் வாக்கில் நறுக்கியது
- 1 கைப்பிடி புதினா இலை
- 3 பச்சை மிளகாய்
- 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
- ¼ tbsp மஞ்சள் தூள்
- ½ tbsp மல்லி தூள்
- 1 tbsp கரம் மசாலா
- 1 tbsp மிளகாய் தூள்
- ¼ கப் கெட்டியான தயிர்
- 200 கிராம் பன்னீர் நறுக்கியது
- 1 கப் பாஸ்மதி அரிசி
- 1 ½ கப் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- 1 கைப்பிடி கொத்த மல்லி
- 1 tbsp நெய்
செய்முறை
- முதலில் ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசி இரண்டு முறை தண்ணீரில் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும்.
- பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் பிரியாணி இலை, பட்டை மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்களை சேர்த்து கிளறி விடுங்கள். அதன் பின்பு நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
- பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்ததும் அதனுடன் மூன்று பச்சை மிளகாய் மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பச்சை வாடை போகியதும் பின் இதனுடன் ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- அதன் பின்பு இதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் போன்ற மசாலா பொருட்கள் சேர்த்து வதக்கவும். பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளியும் நன்கு மசிந்து வந்ததும் கால் கப் அளவிற்கு கெட்டியான தயிர் ஊற்றி கிளறி விடவும். பின் இதனுடன் மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிய பன்னீரை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கிவிட்டு.
- பின் இதனுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் கடைசியாக ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி குக்கரை மூடி வைத்து விடுங்கள்.
- பின் குக்கரில் ஒரு விஷயம் வரும் வரை வேக வைத்து இறக்கி கொள்ளுங்கள் பெண் பிரஷரை இறங்கியதும் திறந்த பிரியாணியை பரிமாறிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான பன்னீர் பிரியாணி தயார்