என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக
இதையும் படியுங்கள் : சுவையான முட்டை கோஸ் பருப்பு கூட்டு செய்வது எப்படி ?
வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த புடலங்காய் பருப்பு கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கும் பிடிக்கும். நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். ஆகையால் இன்று இந்த புடலங்காய் பருப்பு கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
புடலங்காய் பருப்பு கூட்டு | Pudalangai Paruppu Kootu Recipe in Tamil
Equipment
- 1 குக்கர்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேங்காய் அரைக்க
- ¼ கப் துருவிய தேங்காய்
- 3 பச்சை மிளகாய்
- ½ tsp சீரகம்
குக்கரில் வேக வைக்க
- 1 ½ கப் புடலங்காய் நறுக்கியது
- ½ கப் பாசிபருப்பு
- 1 வெங்காயம் நறுக்கியது
- 1 தக்காளி நறுக்கியது
- ½ tsp சீரகம்
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க
- 2 tbsp எண்ணெய்
- 1 tsp கடுகு உளுந்த பருப்பு
- ¼ tsp சோம்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 வர மிளகாய்
செய்முறை
- முதலில் நாம் எடுத்துக் கொண்ட பாசி பருப்பை இரண்டு மூன்று முறை தண்ணீர் வைத்து நன்கு அலசிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் மசாலா அரைப்பதற்கு துருவிய தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் மற்றும் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு ஒரு குக்கரில் அலசிய பாசிப்பருப்பு நறுக்கிய புடலங்காய், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சீரகம், உப்பு அரைத்த தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி கொள்ளுங்கள்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு மற்றும் சோம்பு சேர்த்து கொள்ளவும். பின் கடுகு நன்கு பொரிந்து வெடிக்கும் பொழுது.
- அதனுடன் நாம் வைத்திருக்கும் இரண்டு வர மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளுங்கள். பெண் இதனுடன் குக்கரில் வேகவைத்த கூட்டை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான புடலங்காய் பாசி பருப்பு கூட்டு இனிதே தயாராகிவிட்டது.