சப்பாத்தி, பூரி போன்றவற்றை செய்வதாக இருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பட்டாணியைக் கொண்டு சுவையான குருமாவை செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்தி பூரிக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். நம்மில் பலருக்கு எளிமையான முறையில் சப்பாத்தி செய்யத் தெரிந்த அளவுக்கு, பட்டாணி குருமா செய்யத்தெரியாது. குருமா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குருமா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. பொதுவாக பஞ்சாபி சமையல் என்றாலே அது தனி சுவைத்தான். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் பட்டாணி வைத்து இது போன்று குருமா செய்து பாருங்க.
வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. அப்புறம் இந்த குருமாவும் மாசாலாவும் காலியாகிவிடும், சோறும் காலியாகி விடும். பட்டாணி கொண்டு பஞ்சாபி தாபா ஸ்டைலில் எப்படி ஒரு குருமா செய்யலாம் என்று பார்ப்போம். இந்த பட்டாணி குருமா செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். பட்டாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒரு காய்கறி வகை ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பட்டாணி குருமா பஞ்சாபி சுவையில் இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பஞ்சாபி பட்டாணி குருமா | Punjabi Peas Kurma Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சை பட்டாணி
- 2 உருளைக்கிழங்கு
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 3 பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 3/4 டீஸ்பூன் கறிமசாலா தூள்
- உப்பு தேவையான அளவு
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் சோம்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்பு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின் வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லி தூள், கறி மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- மசாலா வாசனை போனதும் உருளைக்கிழங்கை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- பிறகு நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து நான்கு விசில் விட்டு இறக்கவும்.
- பின் குக்கரை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பஞ்சாபி பட்டாணி குருமா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பட்டாணி குருமா இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசை , பூரி, சப்பாத்தி அனைத்திற்கும் பக்காவாக இருக்கும்!