Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன் மற்றும் புதன் இணைவினால் உருவாகும் இந்த யோகம் பலருக்கு கல்வியில், தொழிலில், உத்தியோகத்தில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்பு முனையைத் தந்து உள்ளது.

-விளம்பரம்-

புதனும் சூரியனும் இணைவதால் உருவாகும் இந்த யோகம் பல விதங்களிலும் நன்மைகளையே வழங்கும். புதன் சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம். புதன் கல்விக்கு உரிய கிரகமாகக் கருதப்படுகிறது.ஒருவரின் ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் அமைந்திருந்தால் அவர் ஞானவானாக விளங்குவார். வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் அதிபதியான புதன் மற்றும் கிரகங்களின் ராஜாவான சூரியனால் இந்த நேரத்தில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.

இது மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இது தவிர, இது பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த ராசிகள் என்னவென்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

புத ஆதித்ய யோகம்

பொதுவாக ராகு – கேது மற்றும் சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் சூரியனுடன் நெருங்கி வரும்போதெல்லாம், அந்த கிரகம் அஸ்தங்க பெற்று, அதன் வலிமையை இழக்கிறது. ஆனால், அக்கிரகம் எவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமானது.

சூரியனுக்கு முதல் வட்ட பாதையில் புதன் இருப்பதால் சூரியனின் வெப்பத்திற்கு ஈடு கொடுத்து, அதாவது சூரியனின் ஈர்ப்பு விசை உள்ளிழுக்கப்பட்டு அழிந்து விடாமல் புதன் தன் பாதையில் சுற்றி வரும்படி புதனின் கட்டமைப்பு அமைந்துள்ளது. சூரியனிடமிருந்து வெளிவரும் அனைத்து கதிர்களையும் தன்னகத்தே தேக்கிக் கொள்ளும் தன்மையை புதன் பெற்றுள்ளது. அதனால் தான் மனிதனின் நினைவாற்றலுக்கும் புத்திக் கூர்மைக்கும் பொது அறிவிற்கும் புதனையே காரக கிரகம் என்கிறோம்.

-விளம்பரம்-

மேஷம்

தாய், தந்தை வழி உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் சீராகும். இழப்பு, நஷ்டங்கள் பொருட்சேதங்கள் குறையும். அவசியம், அநாவசியம் அறிந்து செயல்படுவீர்கள். மனதளவில் இருந்து வந்த கவலை நீங்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பயனுள்ளதாக அமையும். பதவி உயர்வு, சம்பள உயர்வுகான வாய்ப்பு அதிகம் உண்டு. மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வரும் வாய்ப்பு உண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இது நாள் வரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

மிதுனம்

எதையும் சமாளிக்கும் தைரியமும் தெம்பும் கூடும். மனதளவில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். குடும்ப ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய வருமான ஆதாரங்களால் நிதி நிலைமை மேம்படும். பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இருப்ப்பீர்கள். தனிப்பட்ட வாழ்வில் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும். காதல் கைகூடும். திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அலை வீசும்.

சிம்மம்

புதிய உத்தியோக முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த வழக்குகளுக்கு முடிவு கிடைக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அந்த பயணம் மூலம், வரும் காலத்தில் பெரிய அளவில் ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கிடையே இருந்த சச்சரவுகள் நீங்கும். தடைப்பட்டிருந்த நன்மைகள் சுபகாரியங்கள் நிகழும். பெரியவர்களின் ஆசிகளையும் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும். இதனால் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடனில் ஒருபகுதியைத் திருப்பி அடைக்கும் வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியமும் மேம்படும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்