வீட்டில் இட்லி மாவு, தோசை மாவு இல்லை என்ற கவலை இனி தேவையே இல்லை. சட்டென பத்தே நிமிடத்தில் இந்த ராகி குலுக்கு ரொட்டி ரெடி பண்ண முடியும். எந்தெந்த பொருட்களை வைத்து இந்த ராகி குலுக்கு ரொட்டி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை உங்க வீட்ல கட்டாயம் ஒரு வாட்டி செஞ்சு பாருங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த ராகி குலுக்கு ரொட்டி நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் கார சட்னியுடன் நீங்கள் இந்த தோசையை சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அதனால் இன்று இவ்வளவு ருசியான ராகி குலுக்கு ரொட்டி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்
ராகி குலுக்கு ரொட்டி | Ragi Kulukku Rotti Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் ராகி மாவு
- எண்ணெய்
- வறுத்த வேர்க்கடலை
- ஏலக்காய்த்தூள்
- உப்பு
பாகு செய்ய :
- 1 கப் வெல்லம்
- 1 கப் தண்ணீர்
செய்முறை
- வேர்கடலையை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.கேழ்வரகு மாவையும் உப்பையும் கலந்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிருதுவாகப் பிசைந்து மூடி போட்டு பத்து நிமிடம் தனியாக வைக்கவும்.
- அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும், பிசைந்த மாவை சிறு உருண்டையாக பிடித்து எடுத்து தவாவின் நடுவில் வைத்து கைகளால் தட்டி தட்டி தட்டையாக ஆக்கவும், சுற்றிலும் எண்ணெய் விட்டு பிரவுன் நிற புள்ளிகள் வரும் .ஐந்து நிமிடம் வேக விடவும். ரொட்டி முக்கால் பதம் வேகவேண்டும். மறுபுறமும் இதேபோல வேகவிட்டு எடுத்து தட்டில் வைக்கவும். இதேபோல மீதம் இருக்கும் உருண்டைகளையும் வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- வேகவைத்த ரொட்டிகளை எல்லாம் உடைத்து மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வெல்லத்தைச் சேர்த்துக் கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் பாகு தண்ணீரை அடுப்பில் வைத்து தீயைக் குறைத்து பாகு பிசுபிசுப்பு பதம் வர ஆரம்பிக்கும் போதுஉடைத்த ரொட்டித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி விடவும்.
- அடுத்து அதில் ஏலக்காய்த்தூள், பொடித்த வேர்க்கடலையை அடுப்பை அணைத்து ஆற தூவி ஆறவிட்டு மூடி போட்டு இரவு முழுவதும் ஊற விடவும். இதனைஒரு டப்பாவில் சேர்த்து இரண்டு நாட்கள் வெளியே வைத்து, பின்பு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். சத்தான கேழ்வரகு குலுக்கு ரொட்டி
Nutrition
இதையும் படியுங்கள் : சுவையான ராகி லட்டு இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!