நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அதில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது கீரை தான். கீரையில் அதிகப்படியாக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கீரையில் இரும்பு சத்துக்கள் உள்ளது. அதனால் தான் குழந்தைகளுக்கு தினம் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது அவசியம். கீரையில் நிறைய வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆகவே இந்த பதிவில் நாகர்கோவில் ஸ்பெஷல் சிவப்பு கீரை பொரியல் எப்படி செய்வதென்று பார்க்கலாம். கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் சிவப்பு கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. அதோடு இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சாப்பிடுவது, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும்.
வேறு எந்த பழங்கள் அல்லது காய்கறிகளிலும் இல்லாத அளவிற்கு ஊட்டச்சத்து நன்மைகள் கீரையில் இருப்பதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. உதாரணமாக, கீரை இலைகளில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக உள்ளது. இதன் கால்சியம் செறிவு பாலை விட அதிகமாகும். மேலும், நமக்கு ஏராளமான மருத்துவப் பலன்களை வழங்கி வரும். இந்த சிவப்பு கீரையை கூட்டு செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். அதனால் இது போல பொரியல் செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சிவப்பு கீரை பொரியல் சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
சிவப்பு கீரை பொரியல் | Sigappu Keerai Poriyal Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1 கட்டு சிவப்பு கீரை
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 5 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
- தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கி வைத்திருக்கும் கீரையை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், மிளகாய், சீரகத்தை சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு கீரை நன்கு வதங்கியதும் நாம் அரைத்த தேங்காய், சீரக மசாலா சேர்த்து நன்கு கலந்து விட்டு இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவும்.
- அவ்வளவுதான் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த நாகர்கோவில் சிவப்பு கீரை பொரியல் தயார். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சத்துக்கள் நிறைந்த முளைக்கீரையில் ஒரு தரம் சாம்பார் இப்படி செய்து பாருங்கள் அட்டகாசமான ருசியில் இருக்கும்!