Advertisement
இனிப்பு பொருள்

திருவையாறு அசோகா அல்வா ஈஸியாக வீட்டிலே இப்படி செய்து பாருங்க! தித்திக்கும் சுவையில் அட அட!

Advertisement

திருவையாறு என்பது தியாகராஜ சுவாமிகளின் இல்லம், உலகப் புகழ் பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒன்றாகும். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் மட்டுமே கிடைக்கும் அசோக அல்வா இங்கு மிகவும் சிறப்பானது.

அசோகா ஹல்வா பருப்பு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்யப்படுகிறது. மற்ற வகை அல்வாக்களை விட இது மிகவும் சுலபம். அதே நேரத்தில், சுவை அமோகமாக இருக்கும். பாசிப்பருப்பை வைத்து நெய் சேர்த்து செய்ய படுவதால் , இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட.

Advertisement

மற்ற அல்வாவை செய்ய அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இந்த அசோகா அல்வாவை செய்வது மிகவும் சுலபம். சுவாமிக்கு இனிப்பு படைப்பதாக இருந்தால் அசோகா அல்வா அதிக நேரம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. இதனை சட்டன செய்து முடித்துவிட முடியும். அத்துடன் இதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும். ஒருமுறை இதை செய்து சுவைத்து விட்டால் மீண்டும் அடுத்த முறை நீங்களே இதனை செய்ய தொடங்கி விடுவீர்கள். இந்த சுவையான பாசிப்பருப்பு அல்வாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அசோகா அல்வா | Ashoka Halwa Recipe In Tamil

Print Recipe
மற்ற அல்வாவை செய்ய அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இந்த அசோகா அல்வாவை செய்வது மிகவும் சுலபம். சுவாமிக்கு இனிப்பு படைப்பதாக இருந்தால் அசோகா அல்வா அதிக நேரம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. இதனை சட்டன செய்து முடித்துவிட
Advertisement
முடியும். அத்துடன் இதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும். ஒருமுறை இதை செய்து சுவைத்து விட்டால் மீண்டும் அடுத்த முறை நீங்களே இதனை செய்ய தொடங்கி விடுவீர்கள். இந்த சுவையான பாசிப்பருப்பு அல்வாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Course sweets
Cuisine tamilnadu
Keyword Ashoka Halwa
Cook Time
Advertisement
10 minutes
Servings 4
Calories 132

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 100 கிராம் பாசிப்பருப்பு
  • 200 கிராம் சீனி
  • 2 மேஜைக்கரண்டி கோதுமை மாவு
  • 50 கிராம் நெய்
  • 10 முந்திரிப் பருப்பு
  • கேசரி கலர் சிறிது

Instructions

  • அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பருப்பு நன்றாக வெந்ததும் நன்கு மசித்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானவுடன் கோதுமை மாவை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, பாதி அளவு நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
  • அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது சீனி, கேசரி பவுடர் பவுடர் இரண்டையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
     
  • சீனி நன்கு கரைந்து பருப்போடு சேர்ந்து கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறவும்.
  • பிறகு மீதமுள்ள நெய், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான அசோகா அல்வா ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 132kcal | Carbohydrates: 27.7g | Protein: 3.9g | Fat: 9.1g | Cholesterol: 4mg | Sodium: 6.8mg | Potassium: 160mg | Fiber: 1g | Calcium: 47.1mg | Iron: 0.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

3 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

2 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

11 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

12 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

13 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

14 மணி நேரங்கள் ago