பருப்பு பாயசம் என்பது பாரம்பரிய இனிப்பு உணவாகும், இது பண்டிகை காலங்களில் எங்கள் வீட்டில் செய்யப்படுகிறது. விருந்தினர்கள் இருக்கும்போது பாலில் பாயசம் செய்வார்கள், அதுவும் பெரும்பாலும் சேமியா பாயசம் சர்க்கரை சேர்த்து செய்யப்படும். ஆனால் இதை பருப்பு பாயாசம் வெல்லம் சேர்த்து ஆரோக்யமாக முறையில் தயாரிக்கப்படுவது
நிறைய பேர் பால் சேர்த்த பாயாசம் செய்வார்கள். ஆனால் சில பேருக்கு பால்,சர்க்கரை சேர்த்த பாயாசம் பிடிக்காது. சில பேருக்கு ஆரோக்கியத்திற்கு கூட ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பருப்பு சேர்த்து இப்படி ஒரு பாயாசத்தை செய்து வையுங்கள். பால் சேர்க்காத ருசியான பருப்பு பாயாசம் செய்வது எப்படி ரெசிபி இதோ உங்களுக்காக.
Advertisement
இது பாசிப்பருப்பு , வெல்லம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் சுவையான பாயாசம். இந்த பாயசத்தை தெய்வங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விருந்தாகவோ அல்லது தீபாவளி மாதிரியான பண்டிகைக்கு செய்து பிரசாதமாக கூட செய்யலாம். வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் .
பாசிப்பருப்பு , வெல்லம் மற்றும்தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் சுவையானபாயாசம். இந்த பாயசத்தை தெய்வங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குவிருந்தாகவோ அல்லது தீபாவளி மாதிரியான பண்டிகைக்கு செய்து பிரசாதமாக கூட செய்யலாம். வாங்க இதை எப்படி செய்யலாம்என்று பார்ப்போம் .பருப்பு சேர்த்துஇப்படி ஒரு பாயாசத்தை செய்து வையுங்கள். பால்சேர்க்காத ருசியான பருப்பு பாயாசம் செய்வது எப்படி ரெசிபி இதோ உங்களுக்காக.
Course sweets
Cuisine tamil nadu
Keyword Dal Payasam
Prep Time 5 minutesmins
Cook Time 10 minutesmins
Servings 5
Equipment
1 அடி கனமான பாத்திரம்
Ingredients
1டேபிள் ஸ்பூன்பாசிப்பருப்பு
4டேபிள் ஸ்பூன்கடலைப்பருப்பு
4டேபிள் ஸ்பூன்தேங்காய்
2ஏலக்காய்
5முந்திரி பருப்பு
1/2கப் வெல்லம்
1ஸ்பூன்நெய்
Instructions
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள்.
Advertisement
அதில் பாசிப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு 4 டேபிள் ஸ்பூன், போட்டு இதை சிவக்க பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் பல்லு பல்லாக வெட்டிய தேங்காய் துருவல் தேங்காய் 4 டேபிள் ஸ்பூன் போட்டு லேசாக வருத்து இதையும் தனியாக எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுக்கவும்.
மிக்ஸி ஜாரல் வருத்த தேங்காய் பல்லை போட்டு, நைசாக
Advertisement
அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக வறுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, இதோடு ஏலக்காய் 4, முந்திரி பருப்பு 5, போட்டு ஒரு ஓட்டு ஓட்ட வேண்டும்.
கடலைப்பருப்பு பாசிப்பருப்பு இதெல்லாம் கொரகொரப்பாக அரைபட்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் இந்த பவுடரை கொட்டி கைவிடாமல் கலந்து வேக வைக்கவும்.
இது கொஞ்சம் திக்காகும். ஆகவே அடி பிடிக்காமல் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி பக்குவமாக கலந்து வேக விடுங்கள். சேர்த்து இருக்கக்கூடிய இந்த பருப்பு வகைகள் எல்லாம் நன்றாக வெந்து வந்தவுடன் வெல்லக் கரைசலை சேர்க்க வேண்டும். 1/2 கப் அளவு வெல்லத்தை முதலிலேயே தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த வெல்ல தண்ணீரை இதில் சேர்த்து கலந்து பச்சை வாடை போக கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் உங்களுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ, தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும். வெல்லம் கொதித்துக் கொண்டே இருக்கட்டும்.
இதற்குள் ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, போட்டு சிவக்க வறுத்து இதை அப்படியே கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்தில் ஊற்றி அடுப்பை அணைத்து விடுங்கள்.