- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் இறால் வாங்கினால் அதை வைத்து ஒரு சாதம் செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று இறால் புலாவ், இறால் பிரியாணி சாதம் என்று தனித்தனியாக செய்யாமல் காரசாரமாக ஒரு சாதம் செய்யுங்கள். தினமும் ஒரே மாதிரியான உணவை உண்பதற்குப் பதிலாக, நறுமணமும் ஆரோக்கியமும் நிறைந்த இந்த சாதத்தை செய்து பாருங்கள். இது எப்பவும் செய்கின்ற சாதத்திற்கு ஒரு சிறந்த மாற்றாகும். இதுவரை இறால் வைத்து 65, இறால் கூட்டு, இறால் குழம்பு, இறால் கிரேவி அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செய்து இருப்பீர்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு தடவை இறால் சாதம் செய்து பாருங்கள் நீங்கள் அதுவும் இந்த பதிவில் கூறியுள்ள முறையில் செய்து பாருங்கள். அதுக்கப்புறம் இந்த மாதிரி மட்டும் தான் நீங்கள் செய்வீர்கள் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டாக சூப்பராக இருக்கும். இந்த சுவையான டேஸ்டான இறால் சாதத்தை பாஸ்மதி அரிசியில் செய்து சாப்பிட்டால் உதிரி உதிரியா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இப்போது சுவையான இறால் சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆம்பூர் இறால் பிரியாணி
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் இறாலை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள இறாலை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கலந்து விடவும்.
அதன்பிறகு நாம் வதக்கிய இறால் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான இறால் சாதம் தயார்.






