- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தக்காளி புதினா வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தக்காளி சாதம், புதினா சாதம் என்று செய்யாமல் இரண்டு சேர்த்து வித்தியாசமாக ஒரு சாதம் செய்யுங்கள். குறிப்பாக தக்காளி மற்றும் புதினா கொண்டு இப்படி சாதம் செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும்.
ஒரே ஒருமுறை இந்த சாதம் செய்து கொடுங்கள், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் இந்த சாதம் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகள் டிபன் பாக்ஸை காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி.
உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் என்று செய்து கொடுக்காமல் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம். இப்போது சுவையான தக்காளி புதினா சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு சுட சுட ஒன் பாட் ரசம் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், சோம்பு, பிரியாணி இலை, காய்ந்த மிளகாய் சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள புதினா மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து மூன்று விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி புதினா சாதம் தயார்.






