வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் இந்த தக்காளி பன்னீர் கிரேவியும் ஒன்று. இந்த தக்காளி பன்னீர் கிரேவியானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான தக்காளி கிரேவி செய்ய நினைத்தால் தக்காளி பன்னீர் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.
ஒரு முறை இந்த சுவையான தக்காளி பன்னீர் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம். இந்த தக்காளி பன்னீர் கிரேவியை செய்வதற்கு காய்கறிகள் கூட எதுவும் தேவை இல்லை கொஞ்சம் வெங்காயம், ஒரு கப் தக்காளி, பன்னீர் இருந்தால் போதும் இந்த கிரேவியை 10 நிமிடத்திற்குள்ளே தயார் செய்து விடலாம். இந்த தக்காளி கிரேவியுடன் சோறு உண்டு கை கழுவிய பிறகு வீசும் கை மணம் இன்னொரு முறை சோறு உண்ண தோணும். மேலும், இந்தக் கிரேவியை அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். இந்த கிரேவி நல்ல ஒரு அசைவ குழம்பு சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். மண் வாசனையுடன் கூடிய தக்காளி பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தக்காளி பன்னீர் கிரேவி | Tomato Paneer Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/4 கி தக்காளி
- 2 பெரிய வெங்காயம்
- 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் அரிசி மாவு
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 4 வர மிளகாய்
- கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் தக்காளியை தண்ணீரில் அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் ஒரு பவுளில் அரிசி மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்து தக்காளியில் ஊற்றி கொதிக்க விடவும்.
- கிரேவி கொதித்ததும் பன்னீரை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க விடவும். கிரேவி கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் சுலபமான தக்காளி பன்னீர் கிரேவி தயார். இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் சுவையாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ரோட்டு கடை ஸ்டைல் தக்காளி சட்னி ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க இரண்டு இட்லி சேர்த்தே சாப்பிடுவாங்க!