என்னதான் வித விதமான டிபன் வெரைட்டி இருந்தாலும் நம் வீடுகளில் அதிகம் செய்யும் உணவு இட்லி, தோசை தான், அதுவும் பெரும்பாலான வீடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் காலையில் சமைக்கும் உணவு இட்லி தான். குழம்பு, சட்னி, வறுவல் போன்ற எந்த உணவு செய்வதாக இருந்தாலும் வெங்காயம், தக்காளி இல்லாமல் உணவு தயார் செய்ய முடியாது. அதுபோல் தான் சாம்பாரும். பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை என்றாலே சாம்பார்தான். ஆனால் இட்லி தோசை மட்டும் அல்ல சாதம், சப்பாத்தி, பூரி என எதுவாக இருந்தாலும் இப்படி ஒரு சாம்பார் மட்டும் வச்சு கொடுத்து பாருங்க உங்கள் வீட்டில் இருக்கும் எல்லோருக்கம் மிகவும் பிடிக்கும்.
இட்லி, தோசைக்கு பொதுவாக கடகடவென சட்னி அரைப்பது வழக்கம். ஆனால் சட்னி வகைகள் சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு எளிதாக செய்யக்கூடிய இந்த சாம்பார் செய்து கொடுத்தால் கூடுதலாக 2 இட்லியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சாம்பார் என்றாலே அது பருப்பில் தான் செய்ய முடியும். ஆனால் இந்த தக்காளி சாம்பார் செய்ய பருப்பு அவசியமில்லை. கிட்டத்தட்ட இதுவும் சட்னி போல தான். ரோட்டுக்கடையில் இட்லி, பொங்கலுடன் இந்த சட்னி அதிகம் பரிமாறப்படும். சற்று காரம் தூக்கலாக, தக்காளி புளிப்புடன் டேஸ்டில் சூப்பராக இருக்கும். ரெட் கலரில் இருக்கும் இந்த சட்னிக்கு பெயர் தான் தக்காளி சாம்பார்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமா என அனைத்து வகையான பிரேக் ஃபாஸ்ட் உணவுகளுக்கும் இந்த சட்னி செட் ஆகும். முக்கியமாக இது சீக்கிரம் செய்யக்கூடிய வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டிருக்கும். பேச்சுலர்களும் இந்த தக்காளி சாம்பாரை முயற்சி செய்யலாம். இந்த சாம்பார் செய்வதற்கு காய்கறிகள் எதுவும் தேவையில்லை. வெறும் வெங்காயம், தக்காளி இருந்தாலே போதுமானது. முக்கியமாக இந்த சாம்பார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாக செய்யும் வகையில் ஈஸயாக இருக்கும்.
பருப்பில்லாத தக்காளி சாம்பார் | Tomato Sambar Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 கப் தக்காளி
- 6 பல் பூண்டு
- 1 கப் பெரிய வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- நெய் சிறிதளவு
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளியை நன்கு கழுவி விட்டு சற்று பெரியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி தக்காளி, பூண்டு, வெங்காயம், வர மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி போட்டு நன்கு வதக்கவும்.
- பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- அதன்பிறகு கடலை மாவை கட்டிகள் இல்லாமல் கரைத்து இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பிறகு குழம்பு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தழை, நெய் விட்டு கிளறி விடவும்.
- அவ்வளவுதான் சுவையான, சுலபமான, பருப்பில்லாத தக்காளி சாம்பார் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான குதிரைவாலி சாம்பார் சாதம் காலை டிபனுக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!