நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதவிதமாக கீரை சாதம் செய்து கொடுக்கலாம். பொதுவாகவே குழந்தைகள் மற்ற உணவுகளை உண்பதைவிட கீரைகளை மிகவும் குறைவாகவே உண்கின்றனர். அந்த வகையில் கீரைகளை உண்ணாத குழந்தைகளுக்கு இதைப்போல் கீரை சாதம் செய்துகொடுக்கலாம். ஆம், இன்று நாம் வல்லாரை கீரை சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
வல்லாரை கீரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பதுதான். வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்பு அதிகமாக நிறைந்துள்ளது. காலையில் எழுந்தவுடன் தினமும் வல்லாரை கீரையினை பச்சையாக மென்று சாப்பிட்டுவர மூளை பகுதியில் இருக்கும் நரம்புகள் பலம் பெரும், அதுமட்டுமல்லாமல் ஞாபக சக்தியும் அதிகரிக்க செய்யும். வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக மாணவர்கள் வல்லாரை கீரை சாப்பிட்டால் அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். இதுவரை வல்லாரைக் கீரையை நீங்கள் சட்னியாகவோ, பொரியலாகவோ செய்திருக்கலாம். ஆனால் அடுத்தமுறை வல்லாரை கீரையை சாதம் போல் செய்து கொடுங்கள். இந்த வல்லாரை கீரை சாதம் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும்.
வல்லாரை கீரை சாதம் | Vallarai Keerai Rice Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் உதிரியாக வடித்த சாதம்
- 1 கப் வல்லாரை
- 2 டீஸ்பூன் நெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- வேர்க்கடலை சிறிதளவு
- 1 பெரிய வெங்காயம்
- 6 பல் பூண்டு
- 2 வர மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1/4 கப் தேங்காய் துருவல்
செய்முறை
- முதலில் வல்லாரை கீரையை நன்கு கழுவி நறுக்கி, மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் கடலை பருப்பு, உளுந்து பருப்பு, நிலக்கடலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கீரை, மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
- இத்துடன் எலும்பிச்சை சாறு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, இறுதியாக நாம் வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வல்லாரை கீரை சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான மாங்காய் தக்காளி சாதம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்களேன்! திரும்ப திரும்ப செய்து சாப்பிட தோன்றும்!