வெற்றிலை இருந்தால் போதும் ஒரே வாரத்தில் உங்கள் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!

- Advertisement -

பெரும்பாலான நபருக்கு பணம் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒருவருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்காமல் இருக்கும், ஒருவருக்கு வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள், சிலர் வீட்டில் சுப நிகழ்ச்சிக்காக சில இடத்தில் பணம் கேட்டு இருப்பார்கள் அந்த பணம் வர தாமதமாகி கொண்டே இருக்கும். இன்னும் சிலர் வேலையில்லாமல் இருப்பார்கள் அல்லது குறைந்த சம்பளத்தில் எங்கேயாவது கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். இப்படி பணம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் இருப்பவர்களுக்கு எல்லாம் அந்த இறைவனை பார்த்து கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் வெற்றிலை. இந்த வெற்றிலையை கொண்டு நாம் செய்யக்கூடிய பணம் சம்பந்தமான எந்த பரிகாரமாக இருந்தாலும் செய்து முடித்தவுடன் நமக்கு வெற்றியை மட்டுமே தேடித் தரும். அந்த அளவிற்கு இந்த வெற்றிலைக்கு சக்தி உண்டு நான் இப்போது சொல்ல போகும் இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று செய்து பாருங்கள் அடுத்த புதன்கிழமைக்குள் உங்களுக்கு இருக்கும் பணப் பிரச்சனைகளில் ஒரு பண பிரச்சனை முடிவுக்கு வரும். அப்படி என்ன பரிகாரம், எப்படி செய்ய வேண்டும் என்பதனை தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணப் போகிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

-விளம்பரம்-

தேவையானவை

உங்கள் பண பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய இந்த புதன்கிழமை வெற்றிலை பரிகாரம் செய்ய உங்களுக்கு வெறும் நான்கு பொருள் தான் தேவைப்படும் அதாவது சுத்தமான கிழியாத வெற்றிலைகள் மூன்று, சுத்தமான பசு நெய் சிறிதளவு, சதுர வடிவ பட்டு துணி, ஒரு ரூபாய் நாணயம் இந்த நான்கு பொருட்கள் இருந்தால் போதும் இந்த பரிகாரத்தை எளிமையாக செய்து விடலாம். நீங்கள் இந்த பரிகாரம் செய்வதற்கு எடுக்கும் பட்டு துணி பயன்படுத்தாத புதிய பட்டு துணியாக இருக்க வேண்டும். அதே போல் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் நேரம் புதன்கிழமை ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் செய்துவிட வேண்டும்.

- Advertisement -

பரிகாரம்

இந்த பரிகாரத்தை பூஜை அறையில் அமர்ந்து செய்யலாம் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஒரு தாம்பூல தட்டில் பட்டு துணியை விரித்து வைத்து அதன் பக்கத்தில் வெற்றிலை நெய்யையும் வைத்துக் கொள்ளுங்கள். பின் நீங்கள் வைத்திருக்கும் வெற்றிலையை ஒன்றொன்றாக கையில் எடுத்து அதன் மேல் நீங்கள் வைத்திருக்கும் நெயை கையில் தொட்டு வெற்றிலையை தடவ வேண்டும். அப்படி நீங்கள் வெற்றிலையில் நெய் தடவும் போது உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் பண பிரச்சனைகள் அனைத்தும் சரியாக வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொண்டே நெய்யை வெற்றிலையின் மேல் தடவி வாருங்கள்.

இங்கு வையுங்கள்

மூன்று வெற்றிலையின் மேல் பக்கத்திலும் நெய் தடவி முடித்த பின்னர் நீங்கள் வைத்திருக்கும் மூன்று வெற்றிலையையும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று வெற்றிலைகளையும் நீங்கள் வைத்திருக்கும் பட்டு துணியின் மேல் வைத்து வெற்றிலையின் மேல் நாம் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். பின் வெற்றிலையே சுருட்டி பட்டு துணியை ஒரு முடிச்சாக முடிந்து கொள்ளுங்கள் இங்கு முடிச்சை நீங்கள் வீட்டில் பணம் வைத்து புழங்கும் பணப்பெட்டி, பீரோ, இப்படி எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தவார புதன் கிழமை

இந்த வாரம் புதன்கிழமை இந்த பரிகாரத்தை
செய்து அந்த முடிப்பை பணம் வைக்கும் இடத்தில் வைத்திருப்பீர்கள். பின் அடுத்த வாரம் புதன்கிழமை பழைய வெற்றிலையை எடுத்து மனிதனின் கால் படாத இடங்களில் போட்டுவிட்டு அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை மீண்டும் பரிகாரம் செய்வதாக இருந்தால் பயன்படுத்தலாம். அதே போல் அந்தப் பட்டு துணியையும் தண்ணீரில் லேசாக அலசி பின்பு காய வைத்து பயன்படுத்தலாம். இந்த வாரமும் அதே போல் வெற்றிலையில் நெய் தடவி குலதெய்வத்தை மனதார நினைத்து பின் வெற்றிலையை சுருட்டி பட்டு துணியில் முடித்து பணம் வைக்கும் பட்டியில் வைக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

பண பிரச்சனை தீர்ந்து விடும்

இப்படி உங்கள் பண கஷ்டம் சரியாகும் வரை மூன்று வாரம் அல்லது ஐந்து வாரம் என்று கணக்கு வைத்து தொடர்ந்து இந்த வெற்றிலை பரிகாரத்தை செய்து வர வேண்டும். இந்த பரிகாரத்தை நீங்கள் முடிக்க போகிறீர்கள் இதற்கு மேல் செய்ய வேண்டாம் என்று நினைக்கும் போது நீங்கள் பரிகாரத்திற்கு பயன்படுத்திய அந்த ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் வீட்டின் அருகில் உள்ள கோவில் உண்டியலில் செலுத்தி விடுங்கள் அதே போல நீங்கள் இந்த பரிகாரத்தை துவண்டு போய் கிடக்கும் உங்கள் தொழில் வளர்வதற்காக தொழில் செய்யும் இடம் வியாபாரம் நடக்கும் இடத்தில் செய்யலாம். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here