Home ஆன்மிகம் குரு பெயர்ச்சியின் காரணமாக பண மழையில் நனைய போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

குரு பெயர்ச்சியின் காரணமாக பண மழையில் நனைய போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

ஜோதிட ரீதியாக கிரகங்களின் சேர்க்கையும் கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளிலும் நன்மை தீமை இரண்டையுமே விளைவிக்கும். அதன்படி வருகின்ற மே ஒன்றாம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளதால் இது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நிகழப் போவதால் இதனால் அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் மூன்று ராசிகள் மட்டும் அதிர்ஷ்டத்தில் நனைய போகிறார்கள் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

மேஷ ராசி

மேஷ ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக உள்ளது. வியாழன் மேஷ ராசியில் இரண்டாவது இடத்தில் வருவதால் அதிர்ஷ்டம் கொட்டும் என்றே சொல்லலாம். முக்கியமாக எந்த தொழிலில் கால் வைத்தாலும் அதில் வெற்றி மட்டுமே கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். சில நேரத்தில் எதிர்பாராத பண வரவுகள் இருக்கும் பொருளாதார நிலைமையும் மாறும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும் அந்த திருமண வாழ்க்கையும் நல்லபடியாக அமையும். முன்னோர்களின் சொத்துக்களால் சில ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும் மொத்தத்தில் அதிர்ஷ்டம் மழையில் நனைவீர்கள்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு பதினொன்றாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்க போவதால் பண வரவு அதிகரித்து பொருளாதார நிலைமையில் வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வங்கியில் நீங்கள் சேர்த்து வைத்திருந்த பணம் பல மடங்காக அதிகரிக்கும். தொழிலிலோ அல்லது மற்ற விஷயங்களிலோ புதிய ஒப்பந்தம் முடிவுக்கு வரும். மொத்தத்தில் பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள்.

சிம்ம ராசி

குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். உங்கள் காதலை பற்றி வீட்டில் பேசினால் அது கைகூடி திருமண யோகத்திற்கு செல்லும். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வியாபாரம் செழிப்படைந்து அதன் மூலம் லாபமும் அதிகரிக்கும். அரசு வேலைக்காக காத்துக் கொண்டு தயாராகிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு அரசு வேலை நிச்சயமாக கிடைக்கும்