உங்கள் அப்பா, தாத்தா சேர்க்க நினைத்த பணத்தை கூட சேர்க்க வேண்டுமா ? வெறும் ஒரு விளக்கு போதும்!

- Advertisement -

இவ்வளவு காலமாக உங்களிடம் சேராத பணம், தங்கம் என அனைத்து விதமான ஐஸ்வரியங்களும் உங்களிடம் சேர வேண்டுமா நீங்கள் இந்த ஒரு விளக்கை மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் போட்டு வந்தாலே போதும். நீங்கள் எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அவ்வளவு பணம் மற்றும் சொத்து சுகங்களையும் சேர்க்கலாம். அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு முந்தைய தலைமுறைகள் வாழ்ந்த உங்களது தாத்தா பாட்டிகள் தந்தை என அவர்கள் சம்பாரிக்க நினைத்த பணம், சொத்து சுகங்களை கூட இந்த தலைமுறையிலேயே நீங்கள் சேர்ப்பதற்கு 48 நாட்கள் இந்த விளக்கு ஏற்றினாலே போதும் வழி வகுத்து கொடுக்கும். அதனால் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் இன்று நாம் இந்த விளக்கு எப்படி போடுவது என்று தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பரிகாரம் செய்ய தேவையானவை

48 நாட்கள் தொடர்ந்து இந்த விளக்கு ஏற்றுவதற்கு நமக்கு தேவையான பொருட்கள் என்னவென்றால் ஒரு தாம்பூல தட்டு தேவைப்படும். அது பித்தளையால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் வேறு உலகங்களால் செய்யப்பட்டது எடுக்க வேண்டாம். அந்தப் பித்தளை தட்டின் நடுவில் மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கை வைத்து அதை சுற்றியும் காம்புகள் உடையாமல் மூன்று காய்ந்த மிளகாய் வைக்க வேண்டும், ஒடுகள் உடையாமல் கொட்டையுடன் இருக்கும் புளியபழத்தை வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கைப்பிடி பச்சரிசி மற்றும் ஒரு கைப்பிடி கல் உப்பு வைக்க வேண்டும். இந்த பொருட்கள் எல்லாம் தேவைப்படும். அதுவும் நான் சொன்னது போல் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தீபம் ஏற்றும் நேரம்

இப்படி மேலே சொன்னபடி பொருட்களை தாம்பூல தட்டில் வைத்து அலங்காரம் செய்துவிட்டு. உங்கள் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வரவேற்பு அறையிலோ அமர்ந்து நாம் வைத்திருக்கும் அகல்விளக்கில் புங்கை எண்ணெய் ஊற்றி மஞ்சள் திரி எடுத்து இரண்டு திரியாக திரித்து போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டிய இந்த தீபம் நீங்கள் ஏற்றுவது சூரிய உதயத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும் அதாவது 5 மணிக்கு தீபம் ஏற்று நான் 5.30 மணிக்கு குளிர வைத்து விட வேண்டும்.

கஷ்டம் குறைய தொடங்கும்

இப்படி காலையில் இந்த தீபத்தை ஏற்ற முடியாத சூழ்நிலை உள்ளவர்கள் மாலை சூரியன் முழுமையாக மறைந்து இருள் வந்த பிறகு அதாவது மாலை 6:30 மணிக்கு மேல் இந்த தீபத்தை ஏற்றி வைக்கலாம். அதன் பின்பு ஒரு மணி நேரம் இந்த தீபத்தை ஏற்றி வைத்து பின்பு குளிர வைத்து விடுங்கள். இப்படி இந்த தீபத்தை தினசரி காலை அல்லது மாலை நேரம் ஏதாவது ஒரு சமயத்தில் ஏற்றி வைத்தாலே போதுமானதாக இருக்கும். இப்படி இந்த தீபத்தை 48 நாட்கள் தொடர்ந்து நீங்கள் தவறாமல் ஏற்றும் பொழுது உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையப்படும் அதை நீங்களே உணர்வீர்கள்.

பொருட்களை மாற்ற வேண்டுமா ?

இப்படி 48 நாட்கள் தொடர்ந்து இந்த தீபம் ஏற்றும் போது சில நேரங்களில் பெண்களால் ஏற்ற முடியாத பட்சத்தில் ஆண்கள் இந்த விளக்கை ஏற்றலாம். மேலும் 48 நாட்களில் இந்த தாம்பூல தட்டில் உள்ள பொருட்கள் மீது தூசி எதுவும் படாமல் பார்த்துக் கொண்டு வாருங்கள் பொருட்களை அடிக்கடி மாற்ற தேவையில்லை. அதை மீறி நாம் விளக்கில் ஊற்றும் எண்ணையினால் அல்லது தூசி போன்றவற்றால் நாம் வைத்திருந்த பொருட்கள் மாறிப்போனால் அப்போது பழைய பொருட்களை எடுத்து மனிதனின் காலையில் படாத இடத்தில் போட்டுவிட்டு புதியதாக பொருட்களை மாற்றிக் கொள்ளலாம்.

-விளம்பரம்-

இடையூறுகள்

இப்படி இந்த விளக்கை ஏற்றும் போது நீங்கள் தினமும் பூ போட வேண்டும், மஞ்சள் குங்கும் இட வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. நீங்கள் வழக்கம் போல் புங்க எண்ணையை ஊற்றி திரி மாற்றி விளக்கு ஏற்றி வந்தாலே போதும். இப்படி நீங்கள் இந்த தீபத்தை ஏற்றும்போது உங்களுக்கு எதுவும் இடையூறுகள் வந்தாலும் அல்லது தீபம் ஏறிந்து கொண்டிருக்கும் பொழுது காற்றினால் அணைந்து போனாலும் உங்களின் வாழ்க்கையின் வளர்ச்சியில் தடை வருகிறது என்று அர்த்தம். இப்படி தடை இல்லாமல் 48 நாட்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு கண்டிப்பாக முறையில் அவர்கள் வாழ்வில் ஒரு முன்னேற்றம் இருக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here