வீட்டில் பணம் சேர நாளை இந்த 5 பொருட்களை மட்டும் வாங்குங்கள! நினைத்த கிடைக்கும் ஆடி வெள்ளி!

- Advertisement -

இன்று நமது வீட்டிற்கு குறையாத செல்வவளங்களை அள்ளிதரும் ஒரு ஆன்மீக குறிப்பை பற்றி தான் பார்க்க போகிறோம்.
நாம் பொதுவாக வெள்ளிக்கிழமையில் விஷேசமாக தெய்வங்களுக்கு பூஜை செய்து, வழிபாட்டை மேற்கொள்வது, பரிகாரங்களை செய்வதற்கு காரணம் நீங்கள் மற்ற நாட்களில் செய்யும் பூஜை, புனஸ்காரங்கள், வழிபாடு, பரிகாரங்களை வெள்ளிக்கிழமை செய்யும்போது அதற்கான முழு பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் ஒவ்வொரு வெள்ளியும தவறாமல் நமது வீட்டில் பூஜை செய்து வருகிறோம். இப்படி சாதாரணமான வெள்ளிக்கிழமையை தவற விடக்கூடாது என்று இருப்பார்கள். நமக்கு எண்ணெற்ற பலன்களை அள்ளித் தரும் 21/7/2023 ஆடி மாசத்தில் நாளை வரும் முதல் வெள்ளிக்கிழமை எக்காரணம் கொண்டும் தவற விடாதீர்கள்.

-விளம்பரம்-

யாரை வழிப்பட வேண்டும் ?

அதனால் நாளை இந்த ஆடி வெள்ளிக்கிழமை நாளில் நாம் தெய்வ வழிபாட்டை தவறாமல் கடைபிடிக்கும் போது நமக்கு எண்ணற்ற நல்ல பலன்கள் கிடைக்கும் வெள்ளிக்கிழமை யாருக்கு வழிபாடு செய்வது என்று கேட்டால். ஆடி மாதம் என்றாலே பெண் தெய்வங்களுக்கு உண்டான மாதம் இந்த மாதத்தில் முப்பெரும் தெய்வங்களான சக்தி, சரஸ்வதி, லட்சுமி போன்ற கடவுள்களையும், சப்த கன்னிமார்கள் நம்முடைய குலதெய்வம் போன்ற பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பாக இருக்கும். இந்த தெய்வங்களினன வழிபாட்டை ஒரு பக்கம் நீங்கள் செய்தாலும் நான் இப்போது சொல்ல போகும் விஷயத்தை வெள்ளிக்கிழமை நீங்கள் செய்யும் வழிபாட்டுடன் சேர்த்து செய்து விடுங்கள் குறைவில்லாத செல்வ வளம் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

உப்பு

நான் இப்போது ஒரு சொல்லப்போகும் ஐந்து பொருட்களை நாளை வெள்ளிக்கிழமை அன்று வாங்கி உங்கள் வீட்டில் பூஜையில் வைப்பதன் மூலம் வீட்டிற்கு குறைவற்ற செல்வம் மற்றும் சுபிக்ஷம் உண்டாகும். முதலில் நாம் பார்க்க போகும் பொருள் கல் உப்பு. இந்த கல் உப்பு என்பது மகாலட்சுமி தேவியின் அம்சமாக விளங்கக்கூடிய பொருள். வருகின்ற இந்த முதல் ஆடி வெள்ளி என்று இந்த கல்லுப்பை நீங்கள் வாங்கி உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைக்கும் போது உங்கள் வீட்டிற்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கும் மேலும் கல் உப்பு உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை தனக்குள் ஈ்ர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி கொண்டது இதனால் தான் உங்களுக்கு எந்தவிதமான பண வரவு வந்தாலும் அந்த பணத்திலிருந்து முதல் பொருளாக கல் உப்பு வாங்கும் போது உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மஞ்சள் குங்குமம்

இரண்டாவதாக மஞ்சள் குங்குமம் இந்த மஞ்சள் குங்குமம் உங்கள் வீட்டில் ஏற்கனவே கூட இருக்கலாம் இருந்தாலும் பரவாயில்லை வருகின்ற முதல் ஆடி வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் குங்கும் சிறிது வாங்கி உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். பொதுவாக மஞ்சள் மங்களத்தை உண்டாக்க கூடிய ஒரு பொருளாக விளங்கக்கூடியது. அதனால் வெள்ளிக்கிழமை இந்த மஞ்சள் வாங்கும் போதும் உங்கள் வீட்டில் மங்களம் உண்டாகும் வீட்டிற்கு ஒரு சுபிக்ஷயத்தையும் இது தரும்.

பச்சரிசி

மூன்றாவதாக பச்சரிசி நீங்கள் வருகின்ற ஆடி வெள்ளிக்கிழமை அன்று வாங்க கூடிய ஐந்து பொருட்களின் பச்சரிசியும் ஒன்று இந்த வெள்ளிக்கிழமை நீங்கள் பச்சரிசி வாங்கும் பொழுது அன்னபூரணி தேவியின் பரிபூரணமான ஆசியும் அருளும் உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்கள் வீட்டில் வறுமை பஞ்சம் போன்ற கஷ்டங்களே வராது. முக்கியமாக உங்கள் வீட்டிற்கு தாணிய குறைப்பாடு மற்றும் உணவுக்கு பஞ்சமே வரவே வராது.

-விளம்பரம்-

சர்க்கரை

நான்காவது நாம் பார்க்கக்கூடிய பொருள் சர்க்கரை வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்கு உகந்த தினம் அவருக்கு இனிப்பு பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபடுவது வழக்கம் அதனால் வருகின்ற ஆடி முதல் வெள்ளிக்கிழமை சர்க்கரையை வாங்கி உங்கள் பூஜை அறையில் வைத்து வழிபடுவது உங்களுக்கு எண்ணற்ற பலன்களை கொடுக்கக் கூடியது. நீங்கள் இந்த ஐந்து பொருட்களில் வெள்ளை நிறமாக இருக்கக்கூடிய இந்த ஒரு பொருளையாவது நீங்கள் வாங்கி வைக்கலாம். சர்க்கரை தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அதற்கு பதிலாக நீங்கள் கற்கண்டு கூட வாங்கிக்கலாம்.

ஏலக்காய்

ஐந்தாவதாக நாம் பார்க்க போகிற பொருள் ஏலக்காய் இந்த ஏலக்காய் நம் வீட்டில் ஒரு காந்தம் போல் செயல்படும் ஏன் ஏலக்காய் காந்தம் போல் செயல்படும் என்று சொல்கிறேன் என்றால் எப்படி காந்தம் இரும்பை ஈர்க்குமோ அதுபோல இந்த ஏலக்காய் நம் வீட்டில் இருக்கும் போது நம் வீட்டிற்கு குறைவில்லா அளவிற்கு பணத்தை ஈர்த்து கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு நம் வீட்டின் பத வரவை பணத்தை அதிகரிப்பதில் ஏலக்காய்க்கு ஒரு பங்கு உண்டு. மேலும் ஏலக்காய் லட்சுமி கடாட்சத்துடன் விளங்க கூடிய ஒரு பொருள் இந்த ஏலக்காய் இருக்கக்கூடிய இடங்களில் நேர்மறை சக்திகள் அதிகமாக இருக்கும். நீங்கள் நன்றாக கவனத்திருந்தால் இருந்தால் தெரியும் பெரிய பெரிய பணக்காரர்கள் வியாபாரம் செய்யும் முதலாளி எப்போதும் அவர்கள் வாயில் ஏலக்காயை போட்டு மென்று கொண்டே இருப்பார்கள். இதற்கு காரணம் ஏலக்காயில் பணத்தை ஈர்த்துக்கொடுக்கும் சக்தி அதிகமாக செயல்படுவது தான்.

உங்களால் இந்த ஐந்து பொருட்களும் வாங்க முடியாவிட்டாலும் இந்த ஐந்து பொருட்களை ஏதாவது ஒரு பொருளையாவது வருகின்ற ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று வாங்கி உங்கள் பூஜை அறையில் வையுங்கள். இது உங்களுக்கு ஏராளமான பலன்களை அள்ளி தரும் .

-விளம்பரம்-