சீக்கிரம் சொந்த வீடு வாங்க நாளை ஆடி கிருத்திகையில் 6 விளக்கு இப்படி மட்டும் ஏற்றுங்கள் போதும்!

veedu parukaram
- Advertisement -

நாம் மீத நாட்களில் செய்யக்கூடிய பூஜைகள் பரிகாரங்கள் புனஸ்காரங்களை விட இந்த ஆடி மாதத்தில் நாம் செய்யக்கூடிய பூஜைகள் பரிகாரங்கள் புனஸ்காரங்களுக்கு அதிகப்படியான பலன் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் ஆடி அமாவாசை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும், பூஜைகள் செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் வரிசையாக பார்த்துக் கொண்டு வருகிறோம்.

-விளம்பரம்-

அப்படி இருக்கையில் சொந்த வீடு கட்ட முடியாது என்ற நினைப்பில் இருக்கும் நீங்கள் கூட சொந்த வீடு கட்டுவதற்கும், திருமண தடை இருந்தால் திருமண தடை நீங்குவதற்கும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும். நாம் 9-8-2023 தேதி வரும் இந்த ஆடி கிருத்திகை நாளில் ஒரு சிறிய பரிகாரம் செய்து விட்டால் மட்டும் போதும் நான் மேலே சொன்ன அனைத்து பலன்களும் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

முருகப் பெருமானுக்கான வழிபாடு

சாதாரணமாக மாதங்களில் வரும் கிருத்திகைக்கு நாம் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து பூஜைகள் வழிபாடுகள் செய்து வரும் பொழுது நமக்கு ஏரளமான நல்ல பலன்கள் நமக்கு கிடைக்கும். ஆனால் ஆடி மாதமே சிறப்பு வாய்ந்த மாதம் இந்த ஆடியில் வரும் கிருத்திகையில் நாம் முருகப் பெருமானுக்கு பூஜைகள் பரிகாரங்கள் செய்து வழிபட்டால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். முக்கியமாக இந்த ஆடி கிருதையில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பலன்களை முருகப்பெருமான் வாரி வழங்குவார், கண்டிப்பாக அனைவரும் விரதம் இருக்க தேவையில்லை உடல்நிலை சரியில்லாதவர்கள் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் எப்பொழுதும் போல் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டாலே போதும்.

ஆடி கிருத்திகை பரிகாரம்

சரி பரிகாரம் எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம் இந்த ஆடி கிருத்திகை ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு பிறக்கிறது. இந்த கிருத்திகை நட்சத்திரம் மறுநாள் வியாழன் கிழமை காலலை 9 மணி வரைக்கும் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் முருகப்பெருமானை வேண்டி நான் சொல்லும் இந்த எளிமைாயான பரிகாரத்தை செய்தீர்கள் என்றால் சொந்த வீடே இல்லாதவர்களுக்கு, சொந்த வீடு வாங்கும் யோகம் விரைவில் கைகூடி வரும் வாடகை வீட்டில் இருப்பது எவ்வளவு கஷ்டங்கள் என்று வாடை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியும். அதனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள், திருமண தடை இருப்பவர்கள் நான் சொல்லும் இந்த பரிகாரத்தை ஆடி கிருத்திகையில் செய்து பாருங்கள்.

ஆறு வெற்றிலை

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதலில் முருகப்பெருமானின் திருவுருவப்படத்தை பூஜை அறையில் எடுத்து வைத்து அவரின் படத்திற்கு செவ்வரளி மலரால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள், செவ்வரளி இல்லை என்றால் மல்லி, முல்லை பூ வைத்து அலங்காரம் செய்யுங்கள், பின் முருகப்பெருமான் முன்னால் ஸ்டார் வடிவ அருங்கோன கோலமிட்டு ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை எழுதி கொள்ளுங்கள். பின் முருகப்பெருமான் திருவுருவ படத்திற்கு ஒரு தட்டு வைத்து அந்த தட்டில் ஆறு வெற்றிலைகளை வைத்து கொள்ளுங்கள். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு வெற்றிலையின் மீதும் ஒரு அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு விளக்கேற்றுங்கள்.

-விளம்பரம்-

மந்திரம் உச்சரியுங்கள்

பசு நெய் இல்லாதவர்கள் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் தீப எண்ணெய் ஊற்றி கூட தீபம் ஏற்றுங்கள் ஆனால் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது இன்னும் சிறப்பானதாக இருக்கும். இப்படி முருகப்பெருமானின் முன்பு வெற்றிலையில் தீபம ஏற்றி விட்டு முருகப்பெருமான் முன் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் அல்லது ஓம் முருகா சரவணபவ என்ற மந்திரத்தையும் உச்சரித்துக் முருகப்பெருமானுக்கு பூஜை செய்யுங்கள் இப்படி முருகப்பெருமானுக்கு வெற்றிலையின் மேல் தீபம் ஏற்றி பரிகாரம் செய்வதால்.

முயற்சி எடுக்க வேண்டும்

சொந்த வீடு வாங்கவே முடியாது என்று இருக்கும் உங்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கு நேரம் கைகூடி வரும். இவ்வளவு நாட்களாக திருமணமாகாமல் திருமணம் தடைபட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு திருமணம் யோகம் கூடி வரும். குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் சீக்கிரமாக கிடைக்கும், குறிப்பா சொந்த வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து முடித்தவுடன் மட்டும் நிறுத்தாமல் சொந்த வீடு கட்டுவதற்கு உங்களால் முடிந்த ஒரு சிறு முயற்சியாவது எடுங்கள் அந்த முயற்சிக்கு எதிராக வரும் எந்த தடையாக இருந்தாலும் இந்த பரிகாரம் அதிலிருந்து உங்களை காக்கும் நம்பிக்கையுடன் வரும் ஆடி கிருத்திகையில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்.