இன்று இரவு 7.00 மணிக்கு இதை செய்யுங்கள் கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும்!

- Advertisement -

இன்று நாம் இந்த ஆன்மீக பதிவில் நம்முடைய கடனை எல்லாம் தீர்க்கக்கூடிய, நம் கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்கக்கூடிய நமக்கு பல நன்மைகளை பெற்றுத் தரக்கூடிய, ஏன் நமக்கு கோடீஸ்வர யோகத்தையே உண்டாக்கி தரக்கூடிய ஆடி மூன்றாம் பிறை வழிபாட்டை பற்றி தான் பார்க்க போகிறோம்!

-விளம்பரம்-

அம்பிகைக்கு உண்டான மாதம்

இந்த ஆடி மூன்றாம் பிறை என்பது இன்று 19/ 7/2023 வருகிறது எப்போதும் அமாவாசை அப்புறமாக வரும் இந்த மூன்றாம் பிறை என்பது சிறப்பானது. ஆனால் இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய இந்த ஆடி மூன்றாம் பிறை என்பது மிகவும் விசேஷமானது. ஏனென்றால் இந்த ஆடி மாதம் அம்பிகைக்குரிய மாதம் அம்பிகையே தனக்குரிய வேண்டுதலை பிரார்த்தனையை தவம் இருந்து பெற்ற இந்த ஆடி மாதத்தை நாம் அம்பிகையை நினைத்து வழிபட்டு வருகிறோம். இந்த அம்பிகையாக இருக்கட்டும், சிவபெருமானாக இருக்கட்டும், ஏன் விநாயகர் பெருமானுக்கு கூட தலையில் பிறை இருக்கும்.

- Advertisement -

விஷ்ணு முகூர்த்தம்

ஆகையினால் இன்று இரவு 7.00 மணிக்கு வரும் ஆடி மூன்றாம் பிறை என்பது நமக்கு இருக்கக்கூடிய கடமை தீர்த்து நம் நினைக்கும் வேண்டுதல்களை எல்லாம் நமக்கு நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய நல்ல நாள். அது மட்டுமில்லாமல் இந்த ஆடி மூன்றாம் பிறை புதன்கிழமை அன்று வருவது இன்னும் சிறப்பானதாக இருக்கம். புதன்கிழமை என்பது பெருமாளை வழிபடக்கூடிய நாள் அதனால் இன்று இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் பிரார்த்தனைகள் நமக்கு கூடிய விரைவில் பலன்களை பெற்றுத் தரும். சரி நாம் செய்யப் போகிறே பரிகாரத்தை நாளை எப்போது செய்ய வேண்டும் என்றால் பொதுவாக நாம் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வோம் அதையும் தாண்டி மாலை நேரத்தில் விஷ்ணு மூர்த்தத்தில் பூஜை வழிபாடுகளை கொள்வோம் நாம் இந்த பரிகாரத்தையும் மாலை நேரம் விஷ்ணுமுகூர்த்தத்தில் செய்யப் போகிறோம்.

நீங்கள் நாளை இந்த பரிகாரம் செய்யவில்லை என்றாலும் பராவாயில்லை மாலை 6:30 மணியிலிருந்து 7.15 மணிக்கு நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மேற்கு திசையை நோக்கி இந்த ஆடி மூன்றாம் பிறையை பார்த்து உங்கள் பிரார்த்தனைகளை வைத்தால் கூட போதும் நீங்கள் உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும்.

பரிகாரம் செய்முறை

சரி வாருங்கள் இந்த பரிகாரம் எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம் இந்த பரிகாரத்தை செய்வதற்கு நான் இப்போது சில்வர் தட்டு ஒன்று எடுத்துக் கொண்டேன் நீங்கள் எடுக்கும் பொழுது ஒரு பித்தளை தட்டு அல்லது செம்பினால் செய்யப்பட்ட தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கொள்ளுங்கள் அதன் பின் சிறிது மஞ்சள் குங்குமம் சேர்த்துக் கொள்ளுங்கள். நாம் விஷ்ணு முகூர்த்தத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்வதால் இதனுடன் துளசியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கடைசியாக ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து க் கொள்ளுங்கள் இந்த தட்டில். கடைசியாக தட்டில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள் முடிந்தால் சுத்தமான நெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இப்படி இந்த பரிகாரம் முடிந்தவுடன் ஒரு சரியாக ஒரு 7:00 மணிக்கு மணிக்கு உங்கள் வீட்டின் வெளியே அல்லது பால்கனி, மொட்டை மாடியிலோ நின்று மேற்கு நோக்கி இருக்கும் பிறையை தரிசனம் செய்து உங்கள் கோரிக்கைகளை வையுங்கள்.

-விளம்பரம்-

சிவப்பு நிற துணி

இந்த பிறை பிராத்தனையை நீங்கள் முடிந்து வீட்டிற்குள் வந்ததும் நீங்கள் வைத்திருக்கும் அகல் விளக்கை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு ஒரு சிவப்பு நிற துணியை எடுத்து விரித்து அதில் இந்த மஞ்சள் குங்குமம் பச்சை கற்பூரம் ஒரு ரூபாய் நாணயம் துளசி போன்ற பொருட்களை ஒரு வைத்து ஒரு சிறிய மூட்டையாக கட்டி உங்கள் வீட்டின் பீரோவில் பணம் வைத்து எடுக்கும் இடம் அல்லது தங்க நகைகளை வைத்திருக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் இந்த முடிச்சை அதே இடத்தில் அப்படியே வைத்து விடுங்கள் அதன் பின்பு முடிச்சில் உள்ள நாணயங்களை பத்திரப்படுத்திவிட்டு அதில் காய்ந்திருக்கும் துளசியை மனிதன் கால் படாத இடத்தில் போட்டு விட்டு இந்த சிவப்பு துணியை வேறு ஏதாவது பரிகாரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சை கற்பூரத்தை பர்ஸ்சில் வைத்து கொள்ளுங்கள் பண வரவை அதிகரிக்கும். நாளை இந்த ஆடி மூன்றாம் பிறையில் இதை செய்யும்போது முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள் உங்கள் எண்ணங்கள் ஈடேறும் நீங்கள் வைத்த பிரார்த்தனையை விரைவில் நிறைவேற்றப்படும்!