Home ஆன்மிகம் வீட்டில் அதிர்ஷ்டம், பணம் பெருக கற்றாழை செடியை வீட்டின்‌ இந்த இடத்தில் இந்த திசையில் வைக்க...

வீட்டில் அதிர்ஷ்டம், பணம் பெருக கற்றாழை செடியை வீட்டின்‌ இந்த இடத்தில் இந்த திசையில் வைக்க வேண்டும்!

பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஏதேனும் ஒரு ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. அதில் தாவரங்களும் விதிவிலக்கு இல்லை. நம் வீட்டில் சில செடிகளை வளர்க்கும் போது அதிர்ஷ்டம் நம் வீட்டை தேடி வரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மரம் என்றால் நெல்லி மரத்தை தான் நாம் சொல்லுவோம் ஏனென்றால் நெல்லிக்காய் மகாலட்சுமிக்கு உகந்தது. அதுமட்டுமில்லாமல் குபேரரின் பரிபூரண அருளை பெற்றது, என்பதனால் நம் வீட்டில் நெல்லி மரத்தினை வைத்திருப்போம். அடுத்ததாக பலரும் அவர்கள் வீட்டில் துளசி செடியை வளர்ப்பார்கள். துளசி மாடம் ஒன்று வைத்து அதற்கு வழிபாடு செய்து அதனையும் லட்சுமி போல் கருதி பூஜை செய்து வழிபடுவார்கள் இதனால் பண வரவும் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

இந்த வரிசையில் இன்றைய கால கட்டத்தில் கற்றாழை இல்லாத வீடுகளே இல்லை. ஒவ்வொரு வீட்டில் வாசலில் கற்றாழை உள்ளது. நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு பொருளுமே பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதனை தெரிந்து கொள்ளாமல் தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றோம். கற்றாழையை மருத்துவத்திற்காக மட்டுமில்லை பல விஷயத்திற்காக பயன்படுத்தலாம்.

கண் திருஷ்டி நீங்க கற்றாழை

கற்றாழையை இன்றைய காலத்தில் அனைவரும் வீட்டில் வாசலிலும் உள்ளது. காரணம் கண் திருஷ்டியை நீக்கும் சக்தியை கொண்டது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவும், பணவரவு அதிகரிக்கும் என்றும் ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

எதிர்மறை ஆற்றலிருந்து பாதுகாப்பு

முட்கள் கொண்ட தாவரங்கள் பல பாதுகாப்பு மந்திர பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் வீட்டில் முட்கள் கொண்ட தாவரங்களை யாரும் வளர்க்க மாட்டார்கள். அதனால்தான் பலர் கற்றாழையை பணியிடத்தில் வைக்கிறார்கள், அங்கு இருக்கும் எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க உதவுகிறது.

எந்த கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம்?

முட்களையுடைய ரோஜா செடியை தவிர கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது. ஆனால் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள் கொண்டது என்பதால் அது மட்டும் வளர்க்கலாம். அதேபோல் கிராமங்களில் சோற்றுக் கற்றாழையை வாசலுக்கு முன்பாக கட்டித் தொங்கவிடப் பட்டிருப்பதையும் பார்த்திருப்போம். அது வீட்டுக்கு நன்மையைக் கொடுக்கும்.

-விளம்பரம்-

கற்றாழை செடியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

வாஸ்துப்படி கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதாக இருந்தால், அதை சரியான திசையில் வைத்து வளர்க்க வேண்டும். அப்படி வைத்தால் தான் நற்பலனைப் பெறக்கூடும். கற்றாழை செடியை வீட்டில் வைக்க சிறந்த திசை என்றால் அது வடக்கு அல்லது கிழக்கு திசை தான். வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடுவது மனதிற்கு அமைதியைத் தரும். இவ்விரு திசைகளும் மங்களகரமான திசைகளாகும்.