பெற்றோர் சொல்வதை கேட்டு குழந்தைகள் வளர! கற்றாழை விளக்கு பரிகாரம்!

- Advertisement -

முன்பெல்லாம் நாம் சிறுவயதில் இருக்கும் பொழுது நான் தாய் தந்தையருக்கும், நம்மை விட வயதில் மூத்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து நல்ல விதத்தில் நடந்து கொள்வோம். யார் எவர் என்று தெரியாதவர்களிடம் கூட பணிவாகவும் அன்போடும் பேசுவோம். ஆனால் தற்போது வளர்கின்ற குழந்தைகளுக்கு யாரிடம் எப்படி பேச வேண்டும்? பணிவாக பேசுவது, அன்பாக பேசுவது, என எந்த குணமும் அவர்களிடம் கிடையாது. தாய் தந்தை சொல்வதை கூட கேட்க மாட்டார்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் எதிர்த்து கொண்டு இருப்பார்கள் அவர்கள் சொல்லும் எந்த விஷயத்தையும் காதில் வாங்கிக் கொள்வது கூட கிடையாது.

-விளம்பரம்-

பிள்ளைகளின் எதிர் காலம்

அதையும் மீறி அவர்களை பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடத்தினாலோ அல்லது வதாய் தந்தையர் வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பாக நடத்தினாலும் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்றெல்லாம் கூறி பயமுறுத்துகிறார்கள். அந்த அளவிற்கு இப்போது வளரும் குழந்தைகளுக்கு பொறுப்பின்மை இல்லாமல் இருக்கிறார்கள். ஏன் தாய் தந்தையர்யிடம் கூட கோபத்தை காண்பிக்கின்றனர். அவர்களை கூட எதிர்த்து பேசுகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லாத பாதையிலேயே செல்கிறது இதனை நாம் ஆரம்பத்திலேயே நாம் தடுத்து நிறுத்தினால் தான் அவர்களின் எதிர்காலம் சீரும் சிறப்புமாக இருக்கும்.

- Advertisement -

கற்றாழை தீபம்

ஏன் பெற்றோர்கள் கண்டிப்புடன் இல்லாவிடிலும் குழந்தைகள் கல்வி கற்க போகும் இடங்களில் ஆசிரியர்களுக்கு பயந்து நடந்து கொள்வார்கள். ஏனென்றால் அப்போதிருந்த ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள் என் நாமே சிறுவயதில் ஆசிரியர்களிடம் எவ்வளவு அடி வாங்கி இருப்போம். ஆனால் தற்போது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு கல்வி கற்க போவதே கடமைக்கு செல்வது போல சென்று வருகிறார்கள். ஆசிரியர்களிடமே எதிர்த்து பேசுகிறார்கள். அவர்களே கேலி கிண்டல் செய்கிறார்கள் ஆகையால் இன்று நாம் வீட்டில் உள்ள பிள்ளைகள் நாம் சொன்ன சொல் கேட்பதற்கு செய்ய வேண்டிய பரிகாரமான கற்றாழை தீபத்தை பற்றி பார்க்க இருக்கிறோம்.

ஒழுக்க படுத்தும்

குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள், அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என விரும்புவார்கள் இந்த கற்றாழை த விளக்கை ஏற்றி பாருங்கள். பொதுவாக தீபம் எப்படி வீட்டில் இருக்கும் இருளை நீக்கி ஒளி கொடுக்கிறதோ. அதுபோல நாம் இந்த கற்றாழை விளக்கை ஏற்றும் போது நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மனதில் இருக்கும் அழுக்குகளை நீக்கி அவர்கள் திருந்து நல்லபடியாக வளர்வதற்கு. அறிவையும் ஒழுக்கத்தையும் அவர்கள் மனதில் வளர செய்யும். சரி இந்த கற்றாழை தீபம் எப்படி ஏற்றுவது என்று பார்க்கலாம் வாருங்கள்.

பரிகாரம்

இந்த கற்றாழை தீபம் ஏற்றுவதற்கு இரண்டு மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு தாம்பூழ தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு தாம்பூழ தட்டில் மஞ்சள் குலைத்து மஞ்சள், குங்கும பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நாம் வைத்திருக்கும் இரண்டு அகல் விளக்கியும் தாம்பூழ தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு விளக்குகளையும் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊத்தி நாம் வைத்திருக்கும் மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

பின்பு நாம் வைத்திருக்கும் இரண்டு விளக்குகளுக்கும் நடுவில் நாம் வைத்திருக்கும் கற்றாழையின் ஒரு பகுதியை வைத்து பின்னர் இரண்டு தீபத்தையும் ஏற்றிக் கொள்ளுங்கள். இதில் ஒரு விளக்கு கிழக்கு திசை நோக்கி ஒரு விளக்கு வடக்கு திசை நோக்கியும் எரியும்படி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு விளக்கேற்றியவுடன் உங்களில் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு. நாங்கள் சொல்லும் பேச்சை குழந்தைகள் கேட்டு நடந்துகொள்ள வேண்டுமென மனம் உருகி வேண்டிக்கொண்டு. பதினொரு வாரங்கள் என்ற இந்த நாட்களிலும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால். உங்கள் பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நல்வழியில் நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here