பணத்தின் நான்கு மூலையிலும் இதை தடவி வைத்து பாருங்க! பணம் உங்களிடம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

பணம் நம்மிடம் சேர்வதற்கு உழைக்க தான் வேண்டும் என்று சொன்னாலும் பலர் வருட கணக்காக அயராது உழைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பணம் என்பதே இருக்காது என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த உழைப்புடன் அதிர்ஷ்டம் என்று ஏதாவது இருந்தால் தான் பணம் நம்மிடம் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி பணம் நம்மிடம் சேர்வதற்காக ஆகர்ஷண யோகம் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த ஆகர்ஷண யோகம் என்பது வெகு சிலரிடம் மட்டுமே இருக்கும் அவர்கள் கையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். அவர்களிடம் பண புழக்கமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அதனால் ஆன்மீக ரீதியாக பணம் நம்மிடம் சேர்ந்து கொண்டே இருப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

இந்த ரூபாய் நோட்டை பத்திர படுத்துங்கள்

அப்படி பணம் வரவு உங்களிடம் அதிகரிக்க வைக்கும் ஆகர்ஷணம் என்ற அதிர்ஷ்டம் தரும் யோகம் உங்களிடம் இருக்க வேண்டும் என்றால். நீங்கள் உங்கள் வாழ்வில் பல ரூபாய் நோட்டுகளை கையில் வந்து மாறி போய் கொண்டே இருக்கும். அந்த ரூபாய் நோட்டுகளில் சில எண்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இருக்கும் போது அந்த அதிர்ஷ்டம் வாய்ந்த ரூபாய் நோட்டுகளை மட்டும் செலவு செய்யாமல் நீங்கள் பத்திரப்படுத்தி வைக்கும் போது பணம் உங்களை நோக்கி ஈர்க்கப்பட்டு உங்களிடம் பணவரவு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

பணம் உங்களை தேடி வருமா

அப்படி இந்த ஆகர்ஷண யோகத்தை உங்களிடம் கொண்டு வரும் பணங்களில் எந்த எண்களில் இருக்க வேண்டும் தெரியுமா? 786 இதுதான் இந்த எண்கள் உங்கள் கைக்கு வரும் ரூபாய் நோட்டில் அடுத்தெடுத்து தொடர்ச்சியாக இருக்கும் போது அந்த ரூபாய் நோட்டை நீங்கள் செலவு செய்யாமல் பத்திரப்படுத்தும் பொழுது பணம் ஆனது உங்களை நோக்கி ஈர்க்கப்பட்டு சேர்ந்து கொண்டே இருக்கும். அதோடு உங்களிடம் பணம் சேருவதற்கான யோகங்களும் தன்மையும் சேர்த்து உங்களுக்கு கிடைக்கும் அப்படி இந்த எண்கள் கொண்ட ரூபாய். ரூபாய் நோட்டுகள் வரும்போது அதை தவறாமல் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

புணுகு தடவலாம்

அப்படி இந்த எண்கள் தொடர்ச்சியாக இருக்கும் ரூபாய் நோட்டுகள் எந்த நோட்டாக இருந்தாலும் அதை எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதாவது 2000, 500, 100 இந்த ரூபாய் நோட்டைகளை தான் எடுத்து வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அது பத்து ரூபாய் நோட்டாக இருந்தாலும் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இப்படி நீங்க எடுத்து வைக்கும் இந்த ரூபாய் நோட்டின் நான்கு மூலைகளிலும் புணுகுவைத் தடவி நீங்கள் எப்பொழுதும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள் அதன் பின்பு இந்த ரூபாய் நோட்டை நீங்கள் செலவு செய்யவும் கூடாது, அடிக்கடி எடுத்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

பச்சை கற்பூரம்

வீட்டில் பண வைத்து எடுக்கும் எந்த இடமாக இருந்தாலும் அங்கு வைத்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் தொழில் செய்பவராக இருந்தாலும் வியாபாரம் செய்வாராக இருந்தாலும் கூட உங்களின் தொழில் சம்பந்தமாக நீங்கள் எங்கெல்லாம் பணம் வைத்து பயன்படுத்துகிறீர்களோ அந்த இடத்தில் இருக்கும் பணத்துடன் இந்த புணுகு தடவிய அதிர்ஷ்டம் தரும் பணத்தையும் சேர்த்து வைத்து விடுங்கள் மேலும் பணத்தில் தடவுவதற்கு உங்களுக்கு புணுகு கிடைக்கவில்லை என்றாலும் பணத்தில் நான்கு மூலைகளிலும் பச்சை கற்பூரத்தை தூளை தடவி பத்திரப்படுத்தலாம். ஆனால் புணுகு தடவுவது சிறப்பானதாக இருக்கும். இந்த உணவு உங்கள் வீட்டில் இருக்கும் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும், கிடைக்கவில்லை என்ற பொழுது பச்சைக் கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

ஏஞ்சல் எண்கள்

இப்படி 786 என்ற எண்கள் தொடர்ச்சியாக இருக்கும் ரூபாய் நோட்டுகளில் நீங்கள் புணுகு அல்லது பச்சை கற்பூரத்தை தடவி நீங்கள் பணம் வைத்து இருக்கும் இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கும் பொழுது ஆகர்ஷண யோகமானது உங்களிடம் அதிகமாகவே இருக்கும். இதனால் உங்கள் வாயிலிருந்து பணம் இல்லை என்ற வார்த்தை கூட வராது அந்த அளவிற்கு பணம் என்பது உங்களிடம் சேர்ந்து கொண்டதாக இருக்கும். இந்த பரிகாரத்தில் 786 என்று சொல்லும் இந்த அதிர்ஷ்டம் தரும் ஏஞ்சல் என்னுடன் நாம் புணுகு அல்லது பச்சை கற்பூரம் சேர்த்து தடவும் போது அதன் சக்தி அபரிவிதமாக இருக்கும். அதனால் இந்த எளிமையான பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here