கஷ்டபட்டு சம்பாரித்த பணம் வீண் செலவாகமல் இருக்க வேண்டுமா

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி என வீட்டில் இருவரும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணம் கூட நாம் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்கு பயன்படாமல் போய்விடுகிறது. நம் சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே காற்றோடு காற்றாக கரைந்து போகிறது, நாம் வாங்கிய கடன் தொகை, வீட்டுக்கு தேவையான பொருட்கள், மருத்துவ செலவு என ஏராளமான செலவுகள் தான் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதையும் தாண்டி நாம் ஏதாவது சேமித்து வைக்கலாம் என்று சேமிக்கும் போது தான் மிகப்பெரிய செலவு என்று ஏதாவது வந்து சேரும் நமக்கு. இப்படி வீணாக பணம் செலவாகி கொண்டே இருக்கிறது என்று பலரும் நம்மிடம் புலம்பி கொண்டு போய் இருப்பார்கள். நாமும் அதை நிலையில் தான் இருக்கிறோம் என்று யாரிடம் போய் கூறுவது. அதனால் சம்பாதித்த பணம் வீண் செலவாகாமல் அந்த பணம் நம்மிடம் சேருவதற்காக ஆன்மீகத்தில் இருக்கும் ஒரு வழியை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் பாருங்கள்.

-விளம்பரம்-

உப்பு

நம்முடைய வீட்டில் செல்வம் சேர்வதற்காக நாம் தொழில் நடத்தினாலோ, எதுவும் நிறுவனங்களில் வேலை பார்த்தாலும் நாம் வாங்கும் சம்பளத்தையோ அல்லது நமக்கு வரும் வருமானத்திலையோ அந்த பணத்தை வைத்து முதலில் உப்பு வாங்கினால் நம்முடைய வீட்டிற்கு செல்வம் சேரும் என்பது ஐதீகம் இது பலருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் இந்த உப்பை தவிர்த்து விட்டு இன்னும் சில பொருட்களும் உள்ளது. அந்த பொருட்களை நீங்கள் வாங்கும் பொழுது உங்கள் வீட்டில் மென்மேலும் செல்வம் உயர்ந்து கொண்டே தான் இருக்கும் அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பொருள் என்னவாக இருக்கும்.

- Advertisement -

துவரம் பருப்பு

பொதுவாக மளிகை பொருள்கள் வாங்க சென்றாள் அந்த சிட்டையில் முதலில் எழுதும் பொருள் மஞ்சளாக தான் இருக்கும். ஏனென்றால் மஞ்சள் வீட்டுக்கு மங்கலத்தை கொடுக்கும் என்று எண்ணுவீர்கள் ஆனால் இனி நீங்கள் இவ்வாறு செய்யாதீர்கள் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீன் செலவாகாமல் உங்கள் கையில் நிலையாக தங்குவதற்காக முதலில் உங்கள் வருமானத்தில் நீங்கள் வாங்க வேண்டிய பொருள் துவரம் பருப்பு தான். ஏனென்றால் அன்னபூரணி க்கு மிகவும் பிடித்த தானியமே துவரம் பருப்பு தான் அதனால் அன்னபூரணியின் அம்சம் பொருந்திய இந்த துவரம் பருப்பை நீங்கள் வாங்குவது மிகவும் சிறந்தது அது உங்களுக்கு நல்ல பலனையும் கொடுக்கும்.

துவரம் பருப்பின் மகத்துவம்

நீங்கள் புதிய வீட்டிற்கு பால் காய்ச்சும் போது சில மளிகை பொருட்களை வாங்கி வைத்து இருப்பார்கள் அதில் முக்கியமாக இந்த துவரம் பருப்பு இருக்கும் ஏனென்றால் நம் முன்னோர்களுக்கு இந்த துவரம் பருப்பின் மகத்துவம் பற்றி தெரிந்து இருக்கும். ஏன் எப்பொழுதும் கூட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் என எது நடந்தாலும் அந்த இடத்தில் பொதுவாகவே துவரம் பருப்பு பயன்படுத்தி சாம்பார் தான் செய்வார்கள் ஏன் சாம்பார் வைப்பது எளிதானது, எல்லோருக்கும் பிடித்தமானது என்பதற்காகவா அல்ல ஏனென்றால் நம்மை இதுபோன்று செய்ய சொன்ன நம் முன்னோர்களுக்கு இந்த துவரம் பருப்பின் மகத்துவம் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அதனால் உங்கள் வீட்டில் பணம் சேர்வதற்காக சம்பாதித்த பணத்தில், உங்களுக்கு வரும் எந்த விதமான பணமாக இருந்தாலும் சரி அதில் முதலில் துவரம் பருப்பு வாங்குங்கள் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here