கையில் ஒரு ரூபாய் கூட இல்லை என்றாலும் அரச இலையில் இதை செய்யுங்கள்! பணம் உங்களை தேடி வந்து சேரும்!

- Advertisement -

பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும்.

-விளம்பரம்-

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள். வாஸ்துபடிநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது. பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கான பரிகாரத்தை இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

அரச இலை

சக்தியின் மைந்தன் விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் மரங்களில் அரச மரத்திற்கு கூடுதல் சிறப்பு உண்டு. வினைகள் தீர்க்கும் விநாயகருக்கு உகந்தது அரச இலைகள். அவர் அமர்ந்து அருள் புரியும் மரமே அரசமரம் தான். நம்முடைய பிரச்சனைகள் யாவும் தீர பிள்ளையார் வீற்றிருக்கும் அரச மரத்து இலைகள் 5 மட்டும் போதும். அவ்வளவு சக்தி வாய்ந்தவை இந்த அரச இலைகள்.

பணம் வந்து கொண்டே இருக்க அரச இலை பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் சனிக்கிழமைகளில் மட்டும் தான் செய்ய வேண்டும். ஏனெனில் சனிக்கிழமையில் மட்டும் தான் அரச மரத்தில் மகாவிஷ்ணுவும் மகாலட்சுமி தாயாரும் ஒன்றாக வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். இன்றைய நாளில் இதை செய்யும் போது தான் நமக்கு இந்த பரிகாரத்திற்கான முழு பலன் கிடைக்கும்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் செய்துவிட வேண்டும். இதற்கு 3 அல்லது 5 அரச இலைகள் வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அரச மரத்திலிருந்து இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இலைகளை மாலை 6:00 மணிக்குள் பறித்து விட வேண்டும். 6 மணிக்கு மேல் விருச்சங்களை நாம் தொந்தரவு செய்யக் கூடாது. அரச இலையை வீட்டிற்கு எடுத்து வந்த பின்னர் கங்காஜலம் விட்டு இந்த இலையை அலம்ப வேண்டும். கங்காஜலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

-விளம்பரம்-

பின்னர் மஞ்சளை கடையிலிருந்து வாங்கி அதனை நீங்களே பொடித்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது தயிர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அரச இலை மற்றும் இந்த மஞ்சள் பேஸ்டை உங்கள் பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டுக் கொள்ளுங்கள். நாம் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் பேஸ்டை உங்கள் வலது மோதிர விரலால் எடுத்து அரச இலையில் ரீம் என்ற வார்த்தையை எழுதுங்கள். அதன் பிறகு இந்த இலையை பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து விட்டு உங்களுடைய பணப் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அப்படியே வைத்து விடுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு இந்த இலையை எங்கு வைக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அங்கு வைத்து விடுங்கள். பூஜையறையில் வைக்க வேண்டும் என்று தோன்றினால் அங்கு வைத்து விடுங்கள். அல்லது உங்கள் மணி பரிசில் வைத்து விடுங்கள். தொழில் செய்பவராக இருந்தால் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வைத்து விடுங்கள். விசேஷமான சனிக்கிழமையில் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்முடைய அனைத்து துன்பங்களுக்கும் ஒரு விடுதலை கிடைக்கும் என்றால் நாம் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

-விளம்பரம்-