மணி பர்ஸில் இதை எழுதி வைத்தால் போதும் போதும் சொல்றளவுக்கு பணம் சேரும்!

- Advertisement -

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் அதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். நம் வாழ்வில் பெரும் பங்கு பணத்திற்கு உள்ளது. இக்காலகட்டத்தில் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பது பணமாகவே உள்ளது. இவ்வுலகமே பணத்தின் பின்னாடி ஓடிக் கொண்டிருக்கிறது, அதை குவியலாக சேர்ப்பதற்கு நாம் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

-விளம்பரம்-

இன்றைய காலத்தில் பணம் மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் முதல் ஆண்கள் வரை வேலைக்கு சென்றாலும் அவர்கள் பர்சில் பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. அதிலும் குடும்பத்தில் பல்வேறு செலவுகள் ஏற்படும். நம் பர்சில் பல பொருட்கள் இருக்கலாம். பர்ஸில் பணம் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

அரச மர இலை

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். மூம்மூர்த்திகளின் வடிவமான அரச மரத்தை பூஜை செய்வதும், பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும். அதனால் தான் பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அரச மரம் ஒரு புனிதமான மரமாகக் கருதப்படுகிறது மற்றும் ஒரு புதிய அரசமர இலையை வைத்திருப்பது ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம்.

பர்சில் பணம் சேர பரிகாரம்

சனிக்கிழமை அன்று ஒரு அரச மர இலையை எடுத்து வந்து, நீங்கள் தொழில் செய்யும் இடத்தில், பூஜை செய்யும் இடத்தில் வைத்து, தூபம் போட்டு வணங்கி அதன்பின்பு அந்த இலையை நீங்கள் அமரும் நாற்காலிக்கு கீழே வைத்துவிடுங்கள். இலையின் மேல் அமரக்கூடாது. நாற்காலிக்கு அடியில் தான் இருக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 7 சனிக்கிழமை செய்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மற்ற நாட்களை விட , சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். அதுமட்டுமல்லாமல் நாம் இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் தான் செய்ய‌ வேண்டும். அரசமரத்தில் மகாலட்சுமி தாயார் வீற்றிருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. அதிலும் சனிக்கிழமை அன்று லட்சுமி தாயார் பெருமாளுடன் சேர்ந்து அரச மரத்தில் வாசம் செய்கிறார். அதனால் அரச இலையை நாம் சனிக்கிழமைகளில் மட்டும் தான் எடுக்க வேண்டும் மற்ற நாளில் எடுக்கக் கூடாது. அதையும் ஆறு மணிக்கு முன்பாகவே எடுத்து இதை செய்து விட வேண்டும்.

-விளம்பரம்-

புதிய இலையை வைக்கவும்

ஒரு பவுளில் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் அரைத்த மஞ்சள் தூள் என்றால் மிகவும் சிறப்பு. இந்த மஞ்சளில் கொஞ்சமாக தயிர் சேர்த்து கெட்டியாக குழைத்து கொள்ளுங்கள். அதனை நன்கு குழைத்த பிறகு அரச இலையில் சஷ்டி வடிவத்தை வரைந்து மகாலட்சுமி தாயாரின் முன்பு வைத்து எனக்கு இருக்கும் பண பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட வேண்டும் என்று மணதார வேண்டிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து அது காய்ந்தவுடன் அந்த இலையை எடுத்து உங்கள் பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்த இலையினை தொடக்கூடாது என்றும், ஆண்கள் இந்த இலை வைத்திருக்கும் பர்ஸை இடுப்பிற்கு கீழ் வைக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது. இந்த இலை காய்ந்ததும் புதிய இலையை எடுத்து மறுபடியும் இந்த பதிவில் கூறியுள்ளது போல் செய்து உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்திய இலை காய்ந்ததும் அதனை கால் படாத இடத்தை தோண்டி புதைத்து விடுங்கள்.

இந்த இலையை நீங்கள் பரிசல் மட்டும் தான் வைக்க என்று இல்லை. நீங்கள் பணம் வைக்கும் இடம் தொழில் செய்யும் இடம் எல்லாவற்றிலும் வைத்துக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்தும் போது உங்களுக்கு இருக்கும் பணத் தடைகள் நீங்கி பணவரவு தாராளமாக இருக்கும்.

-விளம்பரம்-