அரிசியில் வெறும் 1 ரூபாயை மறைத்து வையுங்கள்! அள்ள அள்ள குறையாத பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

பணம் என்பது இந்த உலகில் நாம் வாழ்வதற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற ஒரு பொருள் என்று சொல்லலாம். இந்த பணம் உங்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும் போது உங்களுக்கு தெரியாதவன் கூட உங்களுக்கு ராஜ மரியாதை தருவான். அதே பணம் உங்களிடம் இல்லை என்றால் தெரிந்தவன் கூட இந்த சமுதாயத்தில் உங்களை ஒரு மனிதர்களாக கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பு கூடி விட்டது. ஆம் உண்மைதான் ஒரு சிறு வயது குழந்தையிடம் போய் கேட்டால் கூட அதற்கு பணத்தின் மதிப்பு என்னவென்று நன்றாகவே தெரியும்.

-விளம்பரம்-

வற்றாத அளவிற்கு பணம்

அப்படிப்பட்ட இந்த பணம் அனைவரது கைகளிலுமே சேர்ந்து விடாது அதற்கு என்ன யோகம் உள்ளவர்களிடம் மட்டுமே அது சேர்ந்து கொண்டே இருக்கும். அதையும் மீறி நாம் பணம் சேர்க்க நினைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு செலவு வந்து நாம் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை அழித்து விட்டு சென்றுவிடும். அதனால் அள்ள அள்ள வற்றாத அளவிற்கு நம்மிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் ஆன்மீக ரீதியாக சில வேலைகளை செய்யும்போது நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

- Advertisement -

தேவையானவை

இப்படி வற்றாத அளவிற்கு பணம் நம்மிடம் சேர்வதற்காக நாம் செய்யும் இந்த தாந்திரீக வேலையை ஒரு பரிகாரம் என்று கூட சொல்லலாம். அப்படி இந்த தாந்திரீக பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும் என்றால் நமக்கு வெள்ளி அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம் வேண்டும். இரண்டாவது அந்த வெள்ளி பாத்திரம் நிரம்பும் அளவிற்கு தேவையான அளவு அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் உங்கள் வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கு வைத்து அந்த எண்ணிக்கைக்கு ஏற்ற போல் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்ய முதலில் நாம் வைத்திருக்கும் வெள்ளி அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அந்த பாத்திரம் முழுவதும் அரிசியால் நிரப்பிக் கொள்ளுங்கள். வீட்டின் குடும்ப தலைவர் தன் கையில் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொண்டு. உங்கள் குலதெய்வம் அல்லது மகாலட்சுமி தயாரை மணதார நினைத்து உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டும். அப்படி உங்கள் வீட்டில் சேரும் பணம் உங்கள் கையில் நிலையாக தங்க வேண்டும் என மனம் உருகி வேண்டி கொண்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அரிசிக்குள் புதைத்து விடுங்கள். இப்படியாக வீட்டில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்.

சமையல் அறை

இப்படி உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் உங்களின் தேவைகளை கூறி உங்கள் பிரார்த்தனையை சொல்லி கையில் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை அரிசிக்குள் புதைத்து வைத்திருப்போம் அல்லவா. இந்த அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தை அப்படியே எடுத்து சென்று உங்கள் வீட்டில் சமையல் அறையில் தென்கிழக்கு மூலையில் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்பு உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அளவிற்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். பொதுவாக எந்த ஒரு காரியத்தையும் நாம் முழு மனதுடன் சந்தோஷமாக செய்யும்போது அதற்கேற்ற பலன் நமக்கு கிடைக்கும் என்பார்கள். அதனால் இந்த பரிகாரத்தையும் முழு நம்பிக்கையுடன் சந்தோஷமாக செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-