உங்களுடைய பண கஷ்டத்திலிருந்து விடுபட உங்கள் கையில் சிறிது பாதாம் இருந்தால் மட்டுமே போதும்!

- Advertisement -

பலருக்கும் தீராத கடன் சுமை பணக்கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும். என்னதான் உழைத்தாலும் மகாலட்சுமியை வீட்டில் தங்க வைக்கவே முடியவில்லை என புலம்புவார்கள். வீட்டில் கணவன், மனைவி இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் வாங்கிய சம்பளம் வீட்டில் தங்க மாட்டிகிறது என்று கவலைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம். பண கஷ்டம் சரியாகுவதற்காக ஆன்மிக ரீதியாக பரிகாரம் செய்வார்கள். சிலருக்கு பலன் அளித்திருக்கும், சிலருக்கு பலன் அளித்திருக்காது.

-விளம்பரம்-

பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை தான் சிறியதும், பெரியதுமாக அவரவர் நிலைக்கு ஏற்றாற் போல் பலருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனையாக உள்ளது. பணப்பிரச்சனை தீர வேண்டும், கடன் தொல்லை தீர வேண்டும் என பரிகாரம், வழிபாட்டு முறைகள், மந்திரங்கள் ஆகியவற்றை தேடி பார்ப்பவர்கள் அதிகம். எந்த வழியிலாதவது பணப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என தேடுபவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

- Advertisement -

பரிகாரம் செய்யும் முறை

நாம் எல்லோரும் அறிந்த பாதாம் பருப்புக்கு சுக்கிரனையும், பணத்தையும் வசியப்படுத்த கூடிய தன்மை உண்டு. உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, மூன்று பேர் இருந்தால் 3 பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரை வரக்கூடிய மதிய நேரம் 1.00 லிருந்து 2.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இப்பொழுது நாம் எடுத்து வைத்திருக்கின்ற பாதாமை நமது உள்ளங்கையில் வைத்து மூடி சுக்கிர ஹோரையில் “ஓம் சுக்கிர பகவானே போற்றி” என்று இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி நாம் சொல்லும் பொழுது குலதெய்வத்தையும் நாம் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். 11 முறை மந்திரத்தை உச்சரித்து முடித்த பின் நமது குலதெய்வ பெயரை உச்சரித்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

3 பாதம் பருப்புகள்

அதன்பின்பு ஒரு சிறிய காட்டன் பச்சை துணி அல்லது பச்சை பட்டு துணியை சதுர வடிவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் மூன்று பாதாம் பருப்புகளை எடுத்து அந்த பச்சை துணிக்கு நடுவே வைத்து, ஒரு பச்சை நூலால் கட்ட வேண்டும். பச்சை நூலால் கட்டியவுடன் அந்த பாதாமை நாம் சுக்கிர ஹோரை முடிவதற்குள் நாம் பணம் வைத்திருக்கும் பெட்டியினுள் வைக்க வேண்டும். இப்படி பணப்பெட்டியில் நாம் பாதாமை வைக்கும் பொழுது நமக்கு இருக்கும் பண தோஷம் எல்லாம் நீங்கி பண வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

-விளம்பரம்-

வாரம் வாரம் இந்த முடிவினை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. பாதாம்பருப்பு நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். 5 வாரங்களுக்கு ஒருமுறை அந்த பழைய பாதாம் பருப்பை எடுத்து காக்கை குருவிகளுக்கு சாப்பிட போட்டுவிட்டு, மீண்டும் அதே பச்சை துணியில் புதிய பாதாம் பருப்புகளை கட்டி பணப் பெட்டிகள் வைத்து விடுங்கள். இப்படி செய்வதனால் நமது வீட்டில் இருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

இதனையும் படியுங்கள் : நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீண் செலவாகமல் இருக்க! இந்த ஒரு விளக்கு மட்டும் ஏற்றுங்கள் போதும்!