இந்த உலகில் ஒரு உயிர் பிறந்து அதே உயிர் இறந்து போகும் வரை அதற்கு தேவையானது என்று ஒன்று இருந்தால் அது பணம் மட்டுமாகவே இருக்கும். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஒரு உயிர் பிறப்பதற்கு கூட மருத்துவமனைகளில் சில சமயம் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. ஏன் அதே உயிர் இறக்கு தருவாயில் இருக்கும் போது. அதே உயிர் இறந்த பின்னும் அதற்காக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி மனிதனின் வாழ்வின் ஒரு அங்கமாகவே தற்போது பணம் என்பது மாறிவிட்டது. இப்படி நம் வாழ்வில் அங்கமாக மாறிய பணம் நமது வீட்டில் பெருக வேண்டுமானால் இந்த ஒரு கடவுளை வழிபட்டால் மட்டுமே போதும் அது யார் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.
பைரவ அவதாரம்
கடவுள்களில் தாம் தான் பெரியவர் என்ற ஆணவத்தோடு இருந்த பிரம்மதேவரின் ஆணவத்தை அடக்குவதற்காக முற்றும் துறந்த சிவபெருமான் எடுத்த அவதாரமே பைரவர் அவதாரமாகும். பைரவர் அவதாரம் எடுத்த சிவபெருமான் பிரம்மாவின் நான்கு தலைகளில் நான்காவது தலையே வெட்டிய இடம் தான் திருக்கண்டியூர். இங்கு சென்று நாம் கோவிலில் சிவனை தரிசனம் செய்து முடித்து சண்டீகேஸ்வரரை வணங்கி விட்டு வருவோம்.
பணமும் செல்வமும் பெருகும்
ஆனால் அதே போல் தவறாமல் அங்கு இருக்கும் பைரவரையும் வணங்க வேண்டும் இப்படி நீங்கள் அங்கு இருக்கும் பைரவரை வணங்கி வந்தால் உங்களின் மீது இருக்கும் சனீஸ்வரரின் பார்வை விலகி சனியினால் ஏற்படும் பாதிப்புகளும் உங்களுக்கு குறைந்து. உங்கள் வீட்டில் உள்ள செல்வங்கள் பெருகும், நீங்கள் இத்தனை நாட்களாக இழந்த செல்வங்கள் கூட மறுபடியும் உங்களை வந்து அடையும். திருமண ஆகாமல் தடைப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சொர்ண பைரவர்
இவ்வளவு நன்மைகளை நமக்கு தரும் பைரவருக்கு பல வடிவங்கள் இருக்கின்றது அதில் ஒரு வடிவம் தான் சொர்ண பைரவர் இந்த பைரவர் சொர்ணத்தினால் ஆன பீடத்தில் அமர்ந்து கொண்டு அழகிய திருமேனியுடன் சூலம் ஏந்தி பைரவியை மடியில் அமர்த்தி அணைத்தவாறு வலது கையில் தங்க குடம் ஏந்தி காட்சி தருபவர். இந்த பைரவரை நாம் வழிபட்டு வந்தாலும் நமது வீட்டில் உள்ள செல்வங்கள் பெரும், சகல ஐஸ்வர்யங்களும் தானகவே உங்களின் வீடு தேடி வரும்.