நமது வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்கள் இவை மட்டும் இல்லாமல் திடீர் என சந்திக்கும் பண பிரச்சனை, பண கஷ்டங்கள், வறுமை என அனைத்துக்கும் காரணம் கண்திருஷ்டியாக தான் இருக்கும். நம் வாழ்க்கையில் உயரும்போது நம்முடன் இருப்பவர்கள் அல்லது நம்மை பார்த்து இவன் என்ன நல்ல சம்பாதிக்கிறான், வீடு கட்டிக் கொண்டிருக்கிறான், மகிழ்ச்சியாக உள்ளான் என பொறாமைப்படுபவர்களின் எண்ணங்கள் கண் திருஷ்டியாக மாறி நம்மளை வாட்டி வதைக்கும். ஆனால் இதை தடுக்கும் ஆற்றல் ஒரு மரத்திற்கு உண்டு என்றால் உங்களால் நம்ப முடியுமா ? நாம் இந்த மரத்தை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். அதைப் பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.
வாழை மரம்
பொதுவாக வீட்டில் செடி வளர்ப்பவர்கள், வீட்டில் சுற்றி எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும் விரும்புவராக இருந்தாலும் சரி அவர்கள் வீட்டில் சிறிதளவு இடம் எங்கேயாவது இருந்து விட்டால் போதும் கண்டிப்பாக வாழைமரம் நட்டு வளர்த்துக் கொண்டிருப்பார்கள். என் நமது வீட்டில் வைத்தால் கூட இந்த வாழைமரம் சர்வ சாதாரணமாக வளரக்கூடியது. இந்த வாழை மரம் தான் உங்கள் வீட்டின் மேலும் உங்களின் மீதும் படும் கண் திருஷ்டியில் இருந்து உங்களை பாதுகாத்து வரும் என்று உங்களுக்கு தெரியுமா ?
கண் திருஷ்டியை கிரகிக்கும்
ஆம் இப்படி நாம் வீட்டில் வளர்க்கும் வாழை மரம் ஒவ்வொரு நிமிடத்திற்கு நிமிடம் வளரும் தன்மையை கொண்ட மரம். இது எப்படி வளர்கிறதோ அதுபோல உங்களின் வீட்டின் மீதும், உங்களின் மீது படும் கண் திருஷ்டிகள் எல்லாத்தையும் கிரகித்துக் கொண்டு உங்களையும் உங்கள் வீட்டையும் கண் திருஷ்டிகள் நெருங்காத வண்ணம் பாதுகாக்கும். இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும் பெரும்பாலான சுப காரியங்கள், விசேஷ நிகழ்ச்சி போன்றவற்றில் வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்து விடுவார்கள். இப்படி நாம் வாழை மரத்தை வெட்டி கட்டி வைத்தாலும் அது வாடும்வரை அந்த இடத்தில் இருக்கும் கண் திருஷ்டிகளை கிரகித்துக் கொண்டே தான் இருக்கும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
இதனால் நீங்கள் சொந்தமாக தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் அல்லது உங்கள் வீட்டில் அடிக்கடி இந்த வாழை மரத்தை கட்டி வைக்க முடியாவிட்டாலும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் பூஜை செய்யும் சமயத்தில் பூஜையை முடித்துவிட்டு உங்கள் வீட்டின் வெளியே அல்லது உங்கள் தொழில் செய்யும் இடத்தில் வெளியே வோ இந்த வாழை மரத்தை கட்டி தொங்கவிட்டால் அது வாடும்ம் வரை உங்களை சுற்றி இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தையும் கிரகித்துக்கொண்டு உங்களுக்கு நல்ல பலனை மட்டும் அது கொடுக்கும்.
லட்ச கணக்கில் பணம்
நீங்கள் சற்று உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கே புரிய வரும் ஒருவர்கள் நன்றாக வசதியாக வாழ்கிறார்கள் என்றால் அவர்களின் வீட்டின் முன்பாகவோ அல்லது பின் பக்கதிலேயே வாழைமரம் வளர்த்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் வாழைமரம் வளர்க்க முடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போது வாழை மரத்தை உங்கள் வீட்டு முன்னாடி கட்டி வைக்கும் பொழுது கண் திருஷ்டியை அனைத்தும் கிரகித்து கொண்டு அங்கு நேர்மறை ஆற்றலை பரப்பி உங்களின் செல்வம் வளம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். ஏன் இதன் மூலம் உங்களுக்கு லட்ச கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் கூட பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது