பீரோவில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா! பணம் வைக்கும் இடத்தில் இதை தடவி விடுங்கள்!

- Advertisement -

தற்போதைய நாட்களில் பணத்தின் மதிப்பு என்ன என்பது பிஞ்சு குழந்தைக்கு கூட தெரிந்திருக்கும் அந்த அளவிற்கு பணம் என்பது இந்த உலகையே வழி நடத்திச் செல்கிறது. அனைத்து மனிதனுக்கும் ஒரு முக்கிய தேவை என்றால் அது பணம் தான் இந்த பணத்தை நம் வீட்டில் சேர்க்க வேண்டும் என்பதற்காக நாமும் கஷ்டப்பட்ட அயாராது உழைத்திருப்போம். இது போதாது என்று ஆன்மீக ரீதியாகவும் என்னென்ன பரிகாரங்கள் இருக்கிறதோ அத்தனையும் செய்து விட்டோம் இருந்தாலும் நாம் வீட்டில் பணம் சேரவில்லை என்று பார்த்தால் அதற்கு நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட காரணமாகிவிடும். அதனால் நம் வீட்டில் பணம் சேர்வதற்கு பதில் கடன், பணக்கஷ்டம் வந்து சேர்ந்துவிடும். அதனால் நம் திருத்தி கொள்ள வேண்டிய தவறுகள் என்னென்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வீட்டின் அறைகள்

முதலில் நம் வீட்டிற்கு பணம் தடை இல்லாமல் வர வேண்டுமென்றால் அதற்கு நாம் வீட்டில் இருக்கும் அறைகள் அதற்கு என உண்டான திசையில் இருக்க வேண்டும். சமையலறை, பூஜை அறை, படுக்கையறை, இந்த அறைகள் எல்லாம் அதற்கு உண்டான திசையில் அமைந்திருப்பது முக்கியமான ஒன்று இப்படி பணம் வரவுக்காக இந்த விஷயம் எவ்வளவு முக்கியமானதோ. அதே போன்று தான் நமது வீட்டில் இருக்கும் பீரோ நாம் பணத்தை வைத்து எடுக்கும் பீரோவானது அதற்கேற்ற சரியான திசையில் அமைந்திருக்க வேண்டும் அதுபோல பீரோவில் இருக்க வேண்டிய பொருட்கள் மட்டும் இருக்க வேண்டும் அப்படி என்னென்ன பொருட்கள் பீரோவில் இருக்கக் கூடாது என்பதனையும் இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

- Advertisement -

பீரோ இருக்க வேண்டிய இடம்

முதலில் பீரோ வீட்டில் எங்கு இருக்க வேண்டும் தெரியுமா குபேரருக்கு சொந்தமான தென்கிழக்கு மூலையில் தான் இருக்க வேண்டும். அதாவது இதைதான் குபேர மூலை, கன்னி மூலை என்று சொல்வார்கள். இந்த இடத்தில் தான் பீரோ வைக்க வேண்டும் இப்படி இந்த தென் கிழக்கு மூலையில் வைக்கப்பட்ட பீரோவின் கதவு பகுதி வடக்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும் இதுதான் பீரோ வைப்பதற்கான சரியான திசை என்று நம் முன்னோர்களும், சாஸ்த்திரங்களும் சொல்லுகின்றனர்.

பழைய துணிகள்

பெரும்பாலான வீடுகளில் பணம் வைத்து எடுக்கும் முக்கிய இடமாக பீரோவை தான் பயன்படுத்துவார்கள். அப்படி நான் பணம் வைத்து எடுக்கும் பீரோவை லட்சுமி கடாட்சமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் எதிர்மறை ஆற்றலை வெளியிடும் எந்த பொருள்களையும் வைக்க கூடாது உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு சிலர் ஒரு துணிகளை சிறிது நேரம் தான் போட்டு இருந்தேன் என்று சொல்லிவிட்டு அந்த துணியை மறுபடியும் பீரோவிலே மடித்து வைத்து விடுவார்கள். இப்படி ஒரு பொழுதும் செய்யக்கூடாது இப்படி நீங்கள் உடுத்திவிட்டு பழைய துணியை பீரோவில் வைத்தால் அது எதிர்மறை ஆற்றலை தான் வெளியிடும். அதனால் நீங்கள் பணம் வைத்து எடுக்கும் பீரோவில் பணம் என்பதை சேராது அதற்கு மாறாக கடன் சுமையும், பணக்கஷ்டமும் தான் அதிகரிக்கும்.

வாசனை பொருட்கள்

மேலும் நாம் பீரோவை எப்பொழுதும் சுத்தமாக வைத்து அதில் நாம் சுத்தமாக துவைத்து துணிகளை நேர்த்தியாக அடுக்கி வைத்து பயன்படுத்த வேண்டும். அது மட்டும் இன்றி நான் பணம் வைத்து எடுக்கு இடத்தில் துணிகளை வைத்து பயன்படுத்துவதை முடிந்த அளவிற்கு தவிர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பீரோவில் இருக்கும் லாக்கரில் சிவப்பு துணி ஒன்று விரித்து அதன் மேல் பணத்தை வைத்து எடுத்து பழகுங்கள். மேலும் பணம் வைத்திருக்கும் இடமும் சரி பீரோவும் சரி நல்ல வாசனை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதற்காக பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனை பொருட்களை போட்டு வைக்கலாம். பொருள்களின் வாசனை தீர்ந்தவுடன் மீண்டும் புதிய பொருட்கள் போட்டு வைக்கலாம்.

-விளம்பரம்-

புணுகு தடவலாம்

மேலும் பீரோவில் பணம் வைக்கும் பொழுது நாம் வைக்கின்ற பணத்தை கண்டபடி சிதறி போடாமல் ஒரு நேர்த்தியான முறையில் அடுக்கி வைத்து பயன்படுத்த வேண்டும். அது 10,20,50,100,500 ரூபாய் நோட்டாக இருந்தாலும் சரி அல்லது சில்லறையாக இருந்தாலும் சரி அதை முறையாக பராமரித்து பணத்தை மரியாதையுடன் கையாள வேண்டும். அதேபோல் நாம் பணம் வைத்தும் எடுக்கும் இடத்தில் சிறிதளவு புணுகு தடவி வைக்கும் பொழுது பணம் வரவானது அந்த இடத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என சாஸ்திரங்கள் கூறூகின்றனர்.

தூசி படியகூடாது

அதுமட்டுமின்றி ஒரு சில வீடுகளில் பீரோவின் மேல் தூசுக்கள் படிந்து இருக்கும் அதை முறையாக அகற்றாமல் மாதக்கணக்கில் விட்டு விடுவார்கள் ஒரு பொழுதும் அப்படி செய்யக்கூடாது. பீரோவின் மேல் படிந்திருக்கும் தூசுக்களை சுத்தம் செய்ய வேண்டும் இல்லை என்றால் அதிலிருந்து எதிர்மறையான ஆற்றல்கள் வெளியேறும். அதேபோல் பீரோ ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும் பொழுது அந்த இடத்தில் எதிர்மறையாற்றல் அதிகரிக்கும் அதனால் அவ்வப்போது அசைத்து விடுவது மிகவும் நல்லது இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு நம்பிக்கையுடன் செய்து வாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here