உங்களின் மனதில் இருக்கும் எவ்வளவு பெரிய ஆசையாக இருந்தாலும் நிறைவேற்றும் மஞ்சள் பை ?

- Advertisement -

முன்பெல்லாம் கடைவீதிகளுக்கு சென்றாலும், மார்க்கெட்டுக்கு சென்றாலும், ஏன் பள்ளிக்கு செல்லும்போது கூட பலருக்கு மஞ்சள் பைபிள் எடுத்துச் சென்ற நினைவுகள் நிறைந்திருக்கும். ஆனால் தற்போதைய நாட்களில் கைகளில் பைகளை எடுத்துச் சென்றாலே அதை அவமானமாக கருதுகின்றார்கள். அதிலும் மஞ்சள் பைகளை எடுத்து செல்வதே தான் மிகப்பெரிய அவமானமாக கருதுகின்றனர். நாகரீகம் என்ற பெயரில் நாம் செய்யும் சில தவறுகளில் இதுவும் ஒன்று. அப்படி இந்த மஞ்சள் பையின் மகத்துவம் பற்றி தெரியாதவர்கள் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் மஞ்சள் பையில் மகத்துவத்தை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

தற்போதைய நாட்களில் மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு வெளியே செல்பவர்களை கிராமத்தான், பட்டிக்காட்டான் இன்னும் என்னென்ன பெயர்கள் வைத்து ஏளனமாய் பேச முடியும் அந்தப் பெயர்களை வைத்து பேசிக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கு முன் ஒரு விஷயத்தை நினைத்து கொள்ளுங்கள் உங்கள் வீட்டிலேயே கல்யாணம், சுப காரியங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது நீங்கள் அதிகம் கையில் தூக்கி செல்லக்கூடிய பை மஞ்சள் பையாக தான் இருக்க முடியும். ஏன் இன்றைக்கும் கூட நீங்கள் தங்க நகைகள் வாங்க சென்றாலும் அந்த கடைகளில் மஞ்சள் பையில்தான் கொடுத்து அனுப்புவார்கள்.

- Advertisement -

லட்சக்கணகில், கோடிக்கணக்கான பணத்தை முதலீடாக போட்டு நகை கடைகள் வைத்திருக்கும் ஒருவன் எதற்காக நீங்கள் கேவலமாகவும், இழிவாகவும் நினைக்கும் மஞ்சள் பையில் தான் இன்றைக்கும் நீங்கள் வாங்கிய தங்க நகைகளை அதில் போட்டு கொடுத்து அனுப்புகிறாள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஏன் நீங்கள் கோவில் குளம் என்று எங்கு சென்றாலும் அங்கு அவர்கள் பிரசாதத்தை வைத்து தரும் பை கூட மஞ்சள் பையாக தான் இருக்கும். ஏன் இப்போதும் கூட பல கல்யாணங்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது தேங்காய், வாழைப்பழம், மஞ்சள் கயிறு, குங்குமம் என இந்த பொருட்களை எலலாம் மஞ்சள் பையில் போட்டு தான் தருகிறார்கள்.

ஏனென்றால் மஞ்சள் நிறம் என்பது மங்கலத்தை கொடுப்பதாகும். இந்த மஞ்சள் நிற பையில் நீங்கள் வைத்திருக்கும் பணம் நகை எதுவாக இருந்தாலும் அது மென்மேலும் பெருகிக்கொண்டே தான் இருக்கும். ஆதனால் இதன் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் தான் இன்றளவும் கூட பணம் நகைகள் என எது எடுத்துச் சென்றாலும் மஞ்சள் பையில் வைத்து தான் எடுத்துச் செல்வார்கள். அதனால் நீங்கள் ஒரு பொருளை இழிவாகவும் அசிங்கமாகவும் நினைப்பதற்கு முன்பு அந்த பொருளின் மகத்துவத்தைப் பற்றி நான்கு தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திருமணம் தடைப்பட்டு கொண்டிருக்கும் நபரின் ஜாதகத்தை எங்கு எடுத்துச் சென்றாலும் மஞ்சள் பையில் வைத்து எடுத்துச் செல்லுங்கள். அதேபோல் ஜாதகத்தை மஞ்சள் பையிலையே வைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற செய்யும்பொழுது தடைப்பட்டு கொண்டிருந்த திருமணம் நடக்கும். அது போக உங்கள் வீட்டு பத்திரத்தை பாதுகாப்பாக இருப்பதற்காகவும் அல்லது உங்கள் நிலத்தில் வீடு கட்ட விருப்பப்படுகிறீர்கள் என்றாலும் நிலத்தின் பாத்திரத்தை மஞ்சள் பையில் வைத்தால் உங்களின் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறும்.

-விளம்பரம்-

நீங்கள் மிகவும் கஷ்டப்படுவராக இருந்தாலும், உங்களிடம் எதுவும் பணம், நகை, நிலம், வீடு என எதுவும் இல்லாதவராக இருந்தாலும் சரி. மிகவும் பெரிய கடன் சுமையை இருப்பவராக இருந்தாலும் சரி. உங்களது ஆசைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஒரு நோட்டில் உங்களது மனதில் இருக்கும் ஆசைகளை மனம் உருகி அந்த நோட்டில் 11 தடவை, 21 தடவை அல்லது 108 தடவை என கணக்கு வைத்து மனமார எழுதி அந்த நோட்டை மஞ்சள் பையில் வைத்திருந்தால் போதும் உங்கள் நம்பிக்கை சற்று குறையும் முன்பு அனைவருக்கும் மங்களத்தை கொடுக்கும் மஞ்சள் பை உங்களை எப்படி சும்மா விடும் நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும் அதனால் இனிமேலாவது மஞ்சள் பையின் மகத்துவத்தை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here